பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்223

பெரியநாயகி அம்மன் கோவில்

பழனி நகரின் மேற்குப் பகுதியில் பெரியநாயகி அம்மன்
கோவில் உள்ளது. இக்கோவில் பழமையான ஒன்றாகும். பழனி,
ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி நாயக்கர் குடும்பத்தினரால்
இக்கோவிலில் பல திருப்பணிகள் நடந்துள்ளன. நாட்டுக்
கோட்டை நகரத்தார்களால் இக்கோவிலின் நடராசர் சந்நிதி
அமைக்கப்பட்டது. நாடார் சமூகத்தினரின் திருப்பணியும்
இக்கோவிலில் உள்ளது.

கொடிக்கம்பத்தின் எதிரே சோமாஸ்கந்தர் சந்நிதியும்,
அதன் இருபக்கங்களில் கைலாசநாதர் சந்நிதியும், பெரிய
நாயகி அம்மன் சந்நிதி
யும் உள்ளன. பெரியநாயகி அம்மன்
இக்கோவிலின் முக்கிய தெய்வமாகக் கருதப்படுகிறார். அம்மன்
சந்நிதியை அடுத்து முத்துக்குமாரசுவாமி சந்நிதி உள்ளது.
கைலாசநாதர் சந்நிதிக்கு எதிரில் நடராசர் சந்நிதி உள்ளது.

கலைச் சிறப்பு

நடராசர் சந்நிதி

நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் அமைக்கப்பட்ட நடராசர்
சந்நிதி ஒரு கலைக்கருவூலம் ஆகும். இது முற்றிலும்
பளபளப்பான கருங்கல்லினாலாகியது. நுட்பமான
வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளது. கொடுங்கையின்
வேலைப்பாடு குறிப்பிடத்தக்கது. ‘இரண்டு கம்பி’களைக்
கொண்ட இச்சந்நிதியின் கொடுங்கைகள் உருவில் சிறியனவாயினும்
அழகில் சிறந்தவையே. தெற்கு நோக்கியுள்ள இச்சந்நிதியின் முன்
பகுதியில் மூன்று குரங்குகளுக்கு மூன்று உடல்களும், ஒரே
தலையும் உள்ளதுபோல் அமைக்கபடபட்டுள்ள சிற்பம்,
இதையமைத்த சிற்பியின் கைவண்ணத்தைக் காட்டுகிறது.

நவரங்க மண்டபம்

பெரிய நாயகி அம்மன் கோபுர வாயிலுக்கு வெளியில்
நவரங்க மண்டபம்
உள்ளது. இம்மண்டபம் நாடார்
சமூகத்தினரால் உருவாக்கப்பட்டது. கி.பி.17ஆம் நூற்றாண்டின்