பக்கம் எண் :

50தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

எழும்பூரில் (பாந்தியன்சாலை அருகில்) மோதிபாவா என்ற
பெரியாரின் ‘தர்கா’ உள்ளது.

பரங்கிப்பேட்டையில் உக்கா சா சகாபி என்ற பெரியாரின்
தர்கா உள்ளது. இவர் நபி நாயகத்தின் தோழர் எனப்படுகிறார்.
சென்னைக்கு அருகிலுள்ள கோவளத்தில் தமீ முல் அன்சாரி
என்பாரின் தர்கா உள்ளது. இப்பெரியாரும் நபி நாயகத்தின்
தோழர் எனப்படுகிறார்.