பக்கம் எண் :

92தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

இரண்டாம் கிருஷ்ணப்பர் (1570-1608) வலிமைமிக்க
மன்னராகத் திகழ்ந்தார். சிறந்த ஆட்சியாளராக விளங்கினார்.
இவரது மேலாதிக்கத்தை வேலூரில் ஆட்சி புரிந்த நாயக்க
வம்சத்தினரும் ஏற்றனர். இவர் ஆட்சிக் காலத்தில் செஞ்சி
தமிழ்நாட்டில் புகழ்மிக்க நகராக விளங்கியது. இவர்
டச்சுக்காரர்களுக்குக் கடலூருக்கு அருகில் வாணிபத்தலம் அமைக்க
அனுமதி கொடுத்தார். இவர் விஜய நகர அரசருக்குக் கப்பம்
செலுத்தத் தவறியதால், விஜய நகர அரசர் முதலாம்
வெங்கடன்
செஞ்சிமீது படையெடுத்து வென்றார், இரண்டாம்
கிருஷ்ணப்பர் சிறை பிடிக்கப்பட்டார். இவருக்குப்பின் செஞ்சி
நாயக்க அரசு வலிமையற்றதாகிவிட்டது. கி.பி.1649இல் கடைசி
செஞ்சி நாயக்கரைத் தோற்கடித்து பீஜப்பூரின் படைகள்
செஞ்சியைப் பிடித்தன. பீஜப்பூர் படைகள் செஞ்சியை
பாதுஷா பாத்
என்று பெயரிட்டு ஆட்சி புரிந்தன. 1677இல்
மராட்டிய தலைவர் சிவாஜியால் செஞ்சி கைப்பற்றப்பட்டது.
சிவாஜி காலத்தில் இக்கோட்டை வலுவானதாக்கப்பட்டது.
மொகலாய மன்னர் ஒளரங்கசீப் காலத்தில் அவர் தளபதி
சுல்பிகர்கானின்
நீண்ட முற்றுகைக்குப்பின் செஞ்சி
மராட்டியரிடமிருந்து கைப்பற்றப்பட்டது. சுல்பிகர்கான்
சொரூப்சிங்
என்ற இராஜ புத்திரரிடம் செஞ்சியின்
ஆட்சியை ஒப்படைத்தார். பின் செஞ்சி மொகலாயருக்கு
உட்பட்ட, கர்நாடக நவாபின் ஆட்சிப்பகுதி ஆயிற்று.

சொரூப்சிங்கின் வீரமகன் தேசிங்குராஜன் ஆவார்.
இவர் ஆர்க்காட்டு நவாபின் மேலதிகாரத்தை ஏற்க மறுத்து,
அவருக்குக் கப்பம் கட்டவில்லை. இதனால் ஆர்க்காட்டு நவாப்
சாதத் உல்லா-கான்
கி.பி. 1713இல் ஒரு படையுடன் தேசிங்கு
ராஜனைத் தாக்கினார். செஞ்சி நகருக்கு அருகில் ஒரு முக்கிய
போர் நடந்தது. தேசிங்குராஜன் வீரமாகப் போரிட்டார்.
அவருக்கு மாபத்கான் என்ற நண்பரும் உதவினார்.
இருப்பினும் தேசிங்குராஜன் போரில் கொல்லப்பட்டார்.
ஆர்க்காட்டு நவாப் செஞ்சியைக் கைப்பற்றினார். தேசிங்கின்
மனைவி உடன் கட்டையேறினார். அவ்வரசியின் வீரத்தைப்
பாராட்டி ஆர்க்காட்டு