பக்கம் எண் :

கற்பனை இன்பம்109

கிணங்கி   வந்தடைந்த  தண்மதியைக்   கண்டு  உள்ளம்  தழைத்தான்;
தந்தையின்  தோளில்  ஏறியமர்ந்து   கற்றைச்  சடையின்மீது  இலங்கிய
குழவித்    திங்களைத்    தன்    இளங்கரத்தால்   வளைத்திழுத்தான்.
தண்மதியைச்   சார்ந்த    முருகனது   இளநலம்   முன்னிலும்  சிறந்து
இலங்கிற்று.   விண்மதியின்   தண்மையையும்   வெண்மையையுங்கண்டு,
முருகன்    மனங்களித்தான்;    மதியின்    வட்ட  வடிவத்தைத்  தன்
முகத்தோடு  ஒட்டிப்   பார்த்தான்;   அதன் மேனியிலமைந்த மறுவைத்
தன்   மலர்க்    கரத்தால்   துடைத்தான்.    மதியுடன்  விளையாடிய
மைந்தனைக்   கண்டு   தந்தையார்   மனங்  குளிர்ந்தார்.  இறையனார்
செயல்   கண்டு   இன்பக்  கண்ணீர்  சொரிந்த  முனிவர், ‘யாவர்க்கும்
முன்னவனே   முன்னின்றால்   முடியாத  பொருள்  உளதோ?’  என்று
பாடிப் பரவினார்.