பக்கம் எண் :

188தமிழ் இன்பம்

காட்டு     விலங்குகளை    விடுத்து,    நாட்டு    விலங்குகளைக்
கருதுவோமாயின்,  அவைகளும்   இறையவரைச்   சார்ந்த  உயிர்களாய்
இலங்கக்  காணலாம்.  எருது  ஈசனது  வாகனமாம்;   எருமை  எமனது
ஏற்றமாம்.  பசுவின்  வயிற்றிற்   பிறந்தான்   சித்திரகுப்தன்   என்னும்
வானவன். திருமாலும்  பன்றியாய்த்  தோன்றினான். நன்றி மறவாத நாய்
சாத்தனது  நல்வாகனமாம்.   ஆடு  அங்கியங்   கடவுளுக்கு  அமைந்த
ஊர்தியாம்,  ஆகவே,   எருதுக்குத்  தீங்கிழைத்தால்  ஈசன் முனிவான்;
எருமைக்குத்   தவறிழைத்தால்    எமன்   விடமாட்டான்;   பன்றியைக்
கொன்றால்   மாயோன்   சீறுவான்;    நாயை    எறிந்தால்   சாத்தன்
தொடர்வான்; ஆட்டை அடித்தால் அங்கி அடுவான். 

இனி,     பறவை  இனங்களைச்   சிறிது  பார்ப்போம்;  அன்னமும்
கிளியும்,  சேவலும்  மயிலும்,  குயிலும்  கொக்கும், காக்கையும் கலுழனும்
ஒவ்வோர்     இறைவனை     ஒன்றி   வாழக்   காணலாம்,   அயன்
அன்னத்தின்மீது  அமர்ந்தான்.  மாரவேள்  கிளியின்மீது  ஊர்கின்றான்.
குமரவேள்   சேவலைக்    கொடியாகவும்,    மயிலைப்  பொறியாகவும்
உடையான். குயிலை மாரன் தூதனாக்கினான்.  கொக்கிறகை  ஈசன்  தன்
வேணியில்  அணிந்தான். காக்கையைச்  சனியன்  பிடித்துக்கொண்டான்.
கலுழனைத்  திருமால்   கவர்ந்துகொண்டான்.   ஆகவே, அன்னத்தைத்
துன்புறுத்தினால்   அயன்   சபிப்பான்.   மயிலை,   பேசும்  கிளியைப்
பிடித்தால்  மாரன்  அம்பு  தொடுப்பான்;  சேவலுக்குத்  தீங்கிழைத்தால்
முருகன்  சீறுவான்;  மயிலைப்   பிடித்தால்   அயில்   வேலெடுப்பான்;
குயிலைக்  கொன்றால்  மாரன்  கோபிப்பான்;  காக்கையை  அடித்தால்
சனியன் தொடர்வான்;