|
அயற்சொல் களைந்த அருந்தமிழ்
நூல்களால் |
|
மயற்கை யறுத்தார் மறைமலை யடிகள் |
|
அடிமையு மதமும் அளைந்தமை கண்டே |
|
விடுதலை பெறவழி வேறிலை யென்றே |
|
கடவுள் இலையெனுங் காரங் கலந்து |
|
மடந்தவிர்த் தனர்தன் மானப் பெரியார் |
|
மூவர் குறிக்கோள் முடிபும் ஒன்றே |
|
அடிமை யொழித்த லல்லதை எழுத்தின் |
|
வடிவை யொழித்தல் பெரியார்க்
கில்லை |
|
குறுகிய நோக்கிற் கொள்கை பிறழ்ந்து |
|
பண்டம் விட்டுப் படிவம் பற்றித் |
|
தமிழர் ஒற்றுமை தடுத்துப்
பகைவரைத் |
|
தம்மொடு சேர்த்துத் தமிழுணர் விழந்து |
|
பெரியார் பெயரைக் கெடுப்பார் |
|
தெரியார் தம்மால் தீதுறல் அவர்க்கே. |
|
- ``செந்தமிழ்ச் செல்வி'' ஏப்பிரல்
1979 |