பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
142

அயற
     அயற்சொல் களைந்த அருந்தமிழ் நூல்களால்
     மயற்கை யறுத்தார் மறைமலை யடிகள்
     அடிமையு மதமும் அளைந்தமை கண்டே
     விடுதலை பெறவழி வேறிலை யென்றே
     கடவுள் இலையெனுங் காரங் கலந்து
     மடந்தவிர்த் தனர்தன் மானப் பெரியார்
     மூவர் குறிக்கோள் முடிபும் ஒன்றே
     அடிமை யொழித்த லல்லதை எழுத்தின்
     வடிவை யொழித்தல் பெரியார்க் கில்லை
     குறுகிய நோக்கிற் கொள்கை பிறழ்ந்து
     பண்டம் விட்டுப் படிவம் பற்றித்
     தமிழர் ஒற்றுமை தடுத்துப் பகைவரைத்
     தம்மொடு சேர்த்துத் தமிழுணர் விழந்து
     பெரியார் பெயரைக் கெடுப்பார்
     தெரியார் தம்மால் தீதுறல் அவர்க்கே.

- ``செந்தமிழ்ச் செல்வி'' ஏப்பிரல் 1979