|
New Page 1
"செம்பொன்பதின்றொடி, செம்பருத்தி, குறும்பரம்பு, நாகன்றேவன் போத்து,
தாமரைக்கணியார், குன்றேறாமா என இவை இசையிற் றிரிந்தன.
"பல பொருட்குப் பொதுவென்ற புணர்மொழிகள்தாம், குறிப்பான் உணரும்
பொருண்மையினையுடைய, புணர்ச்சியிடத்து இத்தன்மைய வென்னும் எழுத்து முறைமையை உடையவல்ல என்றவாறு.
"செம்பொன் பதின்றொடி என்றுழிப் பொன்னாராய்ச்சி யுளவழிப்
பொன்னெனவும், செம்பாராய்ச்சியுளவழிச் செம்பெனவும், குறிப்பான் உணரப்பட்டது. இசையிற்
றிரிதலென்றது ஒலியெழுத்திற்கெனவும், எழுத்துக் கடனில வென்றது வரிவடிவிற்கெனவும், கொள்க."
செம்பொன்பதின்றொடி முதலிய எடுத்துக்காட்டுப் புணர்மொழி களை அல்லது
தொடர்மொழிகளைப் பின்வருமாறு பல்வேறு வகையிற் பகுக்கலாம்.
|
செம்பொன்பதின்றொடி |
1. செம்பு |
- ஒன்பதின்றொடி |
| |
2. செம்பொன் |
- பதின்றொடி |
| |
(தொடி |
- பலம்) |
| |
|
|
|
செம்பருத்தி |
1. செம் |
- பருத்தி |
| |
2. செம்பு |
- அருத்தி. (அருத்தி = விருப்பம்) |
| |
|
|
|
குறும்பரம்பு |
1. குறு |
- பரம்பு |
| |
2. குறும்பர் |
- அம்பு |
| |
|
|
|
நாகன்றேவன்போத்து |
1. நாகன் |
- தேவன் - போத்து |
|
2. நாகன்றே |
- வன்போத்து |
| |
3. நாகன் |
- தே - அன்போத்து |
| |
4. நாகு |
- அன்று - ஏவு - அன்பு - ஓத்து. |
| |
(போத்து
ஓத்து |
- ஆண்விலங்கு
- ஓதப்பெறும் நூல். |
| |
நாகு |
- பெண்விலங்கு) |
| |
|
|
|
தாமரைக்கணியார் |
1. தாமரை |
- க(ண்)ணியார் |
| |
2. தாம் |
- அரைக்கு - அணியார் |
| |
3. தா |
- மரைக்கு-அ(ண்)ணியார் |
| |
தா
மரை |
- தாவுகின்ற
- ஒரு வகை மான் |
| |
|
|
|
குன்றேறாமா |
1. குன்றேறு |
- ஆமா |
| |
2. குன்றேறா |
- மா |
| |
(ஆமா |
- காட்டுப் பசு. மா-விலங்கு) |
|