பக்கம் எண் :

பண்டைத் தமிழகம்151

யென்றும் கொண்டாரென்று வழுமேல் வழுப்படக் கூறினர் பிரயோக விவேகர். தொல்காப்பியர் காலத்தில் வட மொழி யில் இலக்கணநூலேயில்லை யென்பது பின்னர் விளக்கப்படும்.

நீன், நீம் என்பன முறையே முன்னிலை யொருமை பன்மைப் பெயர்கள். நீன் என்னும் வடிவம் இன்றும் தென் னாட்டில் உலக வழக்கில் வழங்கினும், அதன் கடைக்குறை யாகிய நீ என்பதே இன்னோசை பயப்பதாகப் புலவராற் கொள்ளப்பட்டு நூல்வழக்கிற் குரியதாயிற்று. பிற்காலத்தில், நீ யென்பதனொடு இர் என்னும் பலர்பாலீறு சேர்க்கப்பட்டு, நீயிர், நீவிர் என்னும் முன்னிலைப் பன்மை வடிவங்கள் தோன்றின.

நீம் என்னும் பன்மை வடிவம் நூம் என்று திரிந்தது. இகர ஈகாரம் உகரவூகாரமாகத் திரிதல் இயல்பு.

கா :

பிறம் - புறம்

நூ. வ.

பிட்டு - புட்டு

உ.வ.

பீளை - பூளை

பீடை - பூடை

(கொச்சை)

நூம் என்பது வேற்றுமை யேற்கும்போது நும் என்று குறுகும். ஆகவே, நீயிர் என்பதும் நும் என்பதும் வெவ் வேறு வடிவங்களினின்றும் பிறந்தவை யென்பது பெற்றாம்.

நும் என்னும் பெயர் நீயிர் என்னும் பெயராய்த் திரிந்த தாகச் செய்கை செய்வது, ஒன்பது பத்து என்னும் எண்ணுப் பெயர்கள் சேர்ந்து, தொண்ணூறு என்னும் பெயர் தோன் றிற்று என்று கூறுவதையே ஒக்கும்.

(8) ”ஒவ்வும் அற்றே நவ்வலங் கடையே”

(தொல். மொழி. 39)

இதில், நொ என்பது பகுதியாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், நோ என்பதே பகுதியாகும். நொ என்பது அதன் குறுக்கமே.

ஏவல்இ.கா.நி.காஎ.கா.பெயர்

நோ

நொந்தான்

நோகிறான்

நோவான்

நோய்

காண்

கண்டான்

காண்கிறான்

காண்பான்

காட்சி

நோ என்பது ஏவல் வினையாகும்போது, குறுகியே நொம்மாடா, நொந்நாகா என்று நிற்கும். நொ என்பதே இயல்பான வடிவமாயின், அது 'து' என்னும் வினை துக்கி றான், துப்பான்