தொடர்நிலைச் செய்யுள்கள் (காவியங்கள்) தொல்காப் பியர் காலத்தில் அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்னும் எட்டு வனப்பாக வகுக்கப்பட்டன; இக்காலத்தில் பெருந்தொடர்நிலை, சிறு தொடர்நிலை எனவும்; சொற்றொடர் நிலை, பொருட்டொடர் நிலை எனவும் வகுக்கப்பட்டுத் தொண்ணூற்றாறு பனுவல் (பிரபந்தம்)களாக விரிக்கப்படும். கடைக்கழகக் காலத்தை யடுத்தியற்றப்பட்ட பத்துத் தொடர்நிலைச் செய்யுள்களை ஐஞ்சிறுகாப்பியம், ஐம்பெருங் காப்பியம் என இருதிறமாகப் பகுப்பர். இதிகாசம், புராணம் என்னும் நூல்வகைகள், பெயரள வில் வடமொழியேனும், பொருளளவில் இருமொழிக்கும் பொதுவாகும். (4) நயன நீதி : ஆரிய நீதி நடுவுநிலை திறம்பிக் குலத்துக்கொரு வகையாக நீதி கூறும். உ - ம் : “பிராமணனும் க்ஷத்திரியனும் ஒருவரையொரு வர் திட்டிக்கொண்டால், பிராமணனுக்கு 250 பணமும், க்ஷத்திரியனுக்கு 500 பணமும் அறமறிந்த அரசன் தண்டம் விதிக்க.” (மனு. 8 : 276) “பிராமணன் க்ஷத்திரியனை அன்முறையாய் (அநியாய மாய்)த் திட்டினால் 50 பணத்தையும் அங்ஙனம் வைசிய னைத் திட்டினால் 25 பணத்தையும், சூத்திரனைத் திட்டினால் 12 பணத்தையும் தண்டமாக விதிக்க.” (மனு. 8 : 268). “இருபிறப்பாளரின் (மேல் மூவரணத்தாரின்) பெயரையும் குலத்தையும் சொல்லி, இகழ்ச்சியாகத் திட்டுகிற சூத்திரன் வாயில், பத்தங்குல நீளமுள்ள எஃகுக்கம்பியைக் காய்ச்சி எரிய வைக்க.” (மனு. 8 : 271) “பிராமணனுக்குத் தலையை மொட்டையடிப்பதே கொலைத் தண்டமாகும்; மற்ற வரணத்தாருக்கே கொலைத் தண்டமுண்டு. பிராமணன் என்ன பாவஞ் செய்தாலும், அவனைக் கொல்லாமல் காயமின்றி, அவன் பொருளுடன் ஊரைவிட்டுத் துரத்திவிட வேண்டும்.” (மனு. 8 : 379, 80) இத்தகைய முறையே, ஆரிய அறநூல்களில் தலைமை யானதாகச் சொல்லப்படும் மனுதரும சாத்திரத்தில் மலிந்து கிடக்கின்றது.
|