அழலினா லசைந்தது நகை; அணியினா லொசிந்த திடை; குழலினா னிமிர்ந்தது முடி; குறையினாற் கோடிற்று நிறை; |
இருசீரோரடி யம்போதரங்கம் | “உட்கொண்ட தகைத்தொருபால்; உலகறிந்த வலத்தொருபால்; கட்கொண்ட றுளித்தொருபால்; கழிவெய்தும் படித்தொருபால்; பரிவுறூஉந் தகைத்தொருபால்; படிறுறூஉம் பசப்பொருபால்; இரவுறூஉந் தகைத்தொருபால்; இளிவந்த வெளிற்றொருபால்; மெலிவுறூஉந் தகைத்தொருபால்; விளர்ப்புவந் தடைந்தொருபால்; பொலிவுசென் றகன்றொருபால்; பொறைவந்து கூர்ந்தொருபால்; காதலிற் கதிர்ப்பொருபால்; கட்படாத் துயரொருபால்; ஏதில்சென் றணைந்தொருபால்; இயனாணிற் செறிவொருபால்; |
தனிச்சொல் எனவாங்கு ; சுரிதகம் | இன்னதிவ் வழக்க மித்திர மிவணலம் என்னவு முன்னாட் டுன்னா யாகிக் கலந்தவ ணிலைமை யாயினு நலந்தகக் கிளையொடு கெழீஇய தளையவிழ் கோதையைக் கற்பொடு காணியம் யாமே பொற்பொடு பொலிகநின் புணர்ச்சி தானே.” |
வடமொழியிலுள்ள உத்தம் முதல் உற்காதம் வரை யுள்ள 26 சந்தங்களும்; நிகர்த், புரிக், விராட் முதலிய அள வழிச் சந்தங்களும்; மண்டிலம் (விருத்தம்) என்னும் இனயாப் புள் அடங்கும்.
|