பக்கம் எண் :

பண்டைத் தமிழகம்183

2

அன்பினா லமிழ்தளைஇ யறிவினாற் பிறிதின்றிப்
பொன்புனை பூணாகம் பசப்பெய்தப் பொழிலிடத்துப்
பெருவரைத்தோ ளருளுதற் கிருளிடைத் தமியையாய்க்
கருவரைத்தோள் கதிர்ப்பிக்குங் காதலுங் காதலோ;


3

பாங்கனையே வாயிலாப் பலகாலும் வந்தொழுகும்
தேங்காத காவினையுந் தெளியாத விருளிடைக்கட்
குடவரைவேய்த் தோளிணைகள் குளிர்ப்பிப்பான் றமியையாய்த்
தடமலர்த்தா ரருளுநின் றகுதியுந் தகுதியோ;


அராகம்

“தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை தழலென விரிவன பொழில்;
போதுறு நறுவிரை புதுமலர் தெரிதரு கருநெய்தல் விரிவன கழி;
தீதுறு திறமறு கெனநனி முனிவன துணையொடு பிணைவன துறை;
மூதுறு மொலிகலி நுரைதரு திரையொடு கடிதொடர் புடையது கடல்;


நாற்சீரீரடி யம்போதரங்கம்

கொடுந்திற லுடையன சுறவேறு கொட்பதனா
லிடுங்கழி யிராவருதல் வேண்டாமென் றிசைத்திலமோ;
கருநிறத் துறுதொழிற் கராம்பெரி துடைமையால்
இருணிறத் தொருகானி லிராவார லென்றிலமோ ;


நாற்சீரோரடி யம்போதரங்கம்

நாணொடு கழிந்தன்றாற் பெண்ணரசி நலத்தகையே;
துஞ்சலு மொழிந்தன்றாற் றொடித்தோளி தடங்கண்ணே;
அரற்றொடு கழிந்தன்றா லாரிருளு மாயிழைக்கே;
நயப்பொடு கழிந்தன்றா னனவது நன்னுதற்கே;


முச்சீரோரடி யம்போதரங்கம்

அத்திறத்தா லசைந்தன தோள்; அலர்தற்கு மெலிந்தனகண்;
பொய்த்துரையாற் புலர்ந்தது முகம்; பொன்னிறத்தாற் போர்த்தன முலை;