என்று கூறியிருப்பதாலும், “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி” என்பது, முனிவருடைய வாழ்விப்புச் சாவிப்பாற்றலைக் குறியாது, மக்கள் கைக்கொள்ள வேண் டிய விதியாக, அல்லது கடவுளின் கட்டளையாக, முனிவர் கூறிய மறைபொருளுள்ள கூற்றுகளையே குறிப்பதாகும். பக்குவான்மாக்களுக்கன்றிப் பிறர்க்கறிவிக்கப்படாமல் மறைக்கப்பட்டதனால் மறைமொழி யெனப்பட்டது. மறை, மறைநூல் என்பன தமிழர் வேதத்தையும், மறைமொழி என்பது அவ் வேதக் கூற்றையும், வாய்மொழி, மந்திரம் என்பன அவ் வேதச் செய்யுள்களையும் குறிப்பன வாகும். நம்மாழ்வார் வாய்மொழியென்ற சொல்லையும், திருமூலர் மந்திரம் என்னும் சொல்லையும் தெரிந்து கொண்டனர். வாய்மொழி என்பது வாய்க்கும் அல்லது நிறைவேறும் சொல்லென்றும், மந்திரம் என்பது மனத்தின் திரம்பற்றிய சொல்லென்றும் பொருள்படும். மனம், திரம் என்பன தமிழ்ச்சொற்களே. முன்னுதல் - நினைத்தல். முன் + அம் = முன்னம் - முனம். A.S.munan, to thinks. Ger. meinen, to think. முனம் - மனம் (முன் - மன்) ஒ.நோ : முடங்கு - மடங்கு. முறுமுறு - மர்மர் (Murmur), E. மனம் - மனஸ் (Skt.), mens(L.),menos(GK.), mind(E.). திரம் = உறுதி. திரம் - திறம். ர - ற. ஓ.நோ : ஒளிர் - ஒளிறு; கரு(ப்பு) - கறு(ப்பு). திரம் என்பதையே ஸகரமெய் முதற் சேர்த்து ஸ்திரம் என்றனர் வடமொழியாரியர். ஒ.நோ. நாகம் - snake(E). முன் - மன். மன் + திரம் = மந்திரம். ஒ.நோ : தேன் + தட்டு = தேந்தட்டு. வாய்மொழி மந்திரம் என்னுஞ் சொற்கள் ஒருபொருட் சொற்களாகத் தொல்காப்பியத்திற் கூறப்படினும், வழக்குப் பொருளில் அவற்றுக்கு வேறுபாடுண்டு. அது பின்னர்க் கூறப்படும்.
|