பக்கம் எண் :

பண்டைத் தமிழகம்239

கட்டுமரம் என்பது catamaran என்றானது மிக அண்மையிலாகும்.

Sail என்பது சேலை அல்லது சீலை என்னும் பெயரை யொத்திருப்பது முன்னர்க் கூறப்பட்டது.

நங்கூரம் - L. ancora, Gk. angkyra, Fr. ancre, E. anchor.

நங்கூரம் வடிவத்திற் கலப்பைபோன்றிருப்பதால், அப் பெயர் பெற்றது. நாங்கூழ், நாகேல (தெ.), நாஞ்சில் என்பன கலப்பைப் பெயர்கள். நாங்கூழ் - நங்கூரம் - anchor. ஆங்கிலப் பெயரில் நகரமெய் நீங்கிற்று. ஒ.நோ: நாரந்தம் - naranj (Pers.) - arancio (Fr.-It.); E. orange.

கவடி - cowry. கவடி - (பலகறை) ஒரு கடற்பொருள்.

பண்டைத் தமிழர் வாரித்துறையிற் சிறந்திருந்ததினால், வையகம் வட்டவடிவமென் றறிந்திருந்ததாகத் தெரிகின்றது.

மண் + தலம் = மண்டலம் (பூமி) - மண்டிலம் = வட்டம்.

மாநிலத்திற்கு ஞாலம் என்னும் பெயர் வானநூலறி வாலிட்ட பெயராகத் தெரிகின்றது. வாரித்துறையில் சிறந்த வர்க்கு வான நூலும் தெரிந்திருக்கும். வானச்சுடர்களே மீகாமர்க்கு வழிகாட்டிகளும் கடிகாரமும். இதை மாக்கசு முல்லரும் கூறுகின்றார்.

நாலம் - ஞாலம் = உலகம். நால் + அம் = நாலம். நாலுதல் தொங்குதல். வானத்திலுள்ள சுடர்கள் தாங்கலின்றித் தொங்கிக் கொண்டிருப்பதை யறிந்த தமிழர், மாநிலமும் அங்ஙனமே தொங்கிக்கொண்டிருப்பதாக உணர்ந்திருக்க வேண்டும். மற்றப்படி,

“அண்டப் பகுதியி னுண்டைப் பிறக்கம்
................................................................
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரின் துன்னணுப் புரைய
சிறிய வாகப் பெரியோன்”

(திருவி. 3:1-6)

என்ற கருத்து முன்னோர்க்குத் தோன்றியிராது.

ந-ஞ, போலி. கா : நயம் - ஞயம், நண்டு - ஞண்டு.

உலகத்திற்கு அண்டம் (முட்டை) என்னும் பெயரும், வான்சுடர் வடிவுபற்றி வந்ததே. அண்டங்களையெல்லாம்