1. |
ஆங்கிலர் எவரு மின்றி
அலுவல்க ளனைத்தும் நம்மோர் |
|
தாங்கினும் நம்கை யால்பல்
தாரமும் செய்வ மேனும் |
|
தேங்கமழ் பொதிகைத் தென்பால்
தென்னவன் திருவவைக்கண் |
|
ஓங்கிய தமிழன் றேல்வே
றொன்றையும் உகந்திடேனே. |
|
|
2. |
வெள்ளையர் எவரு
மின்றி விழுமிய தேசமேனும் |
|
சள்ளைசச்
சரவுநீங்கிச் சமநிலை யாவமேனும் |
|
கள்ளையுண் டளிகள்
பாடுங் கழனிசூழ் பாண்டிநாட்டுத் |
|
தள்ளையாம் தமிழின்றேல்எத்
துணையும்நான் உகந்திடேனே. |
|
|
3. |
வறுமையே சிறிது
மின்றி வளம்பெற வாழ்வமேனும் |
|
மறுமையாய் இந்துதேசம்
மாணவோர் குலமானாலும் |
|
செறுமைசேர்ந் தாலிவீழும்
செந்தமிழ்க் கன்னிநாட்டு |
|
நறுமையாம் தமிழே
தாழின் நானெதும் உகந்திடேனே. |
|
|
4. |
என்றனக் கிந்துதேசத்
திறைமைவந் தெய்திற்றேனும் |
|
என்றமர் அமைச்சராகி
என்பணி கேட்பரேனும் |
|
குன்றுயர் பொதிகைவாழும்
குறுமுனி நயந்த செம்மை |
|
துன்னுபைந் தமிழின்றேல்எத்
துணையும்நான் உகந்திடேனே. |
|
|
5. |
செப்பிய படைகள்
மூன்றுஞ் சிறந்துபன் னாட்டுச் சங்கம் |
|
ஒப்பிய தலைமை
யாகி ஓங்கினும் பரத கண்டம் |
|
துப்புறழ் கொவ்வைச்
செவ்வாய்த் துடியிடைத் தோகைமாதே |
|
தப்பருந் தமிழின்றேலெத்
தனையும்நான் உகந்திடேனே. |