பக்கம் எண் :

18செந்தமிழ்க் காஞ்சி

17

17. ஜாதிப் பிரிவினையால் தமிழுக்கு வந்த கேடு

'ஆண்டிப் பண்டாரம்' என்ற மெட்டு

ப.

 
   
   ஜாதி வித்தியாசம் - தமிழ்த்  
   தாரணியே நாசம்.  
   

உ.

 
   
   ஒற்றுமை யாயிருந்து உன்னத நாகரிகம்  
   பெற்றுத் திகழ்ந்தவர்க்குள் பிரிவினையுண் டாய்விட்டதே

(ஜாதி)

   

2

 
   
   வடமொழி வார்த்தைகளே வல்லவை என்றுசொல்லித்  
   திடமுளதென் சொற்களைத் தெரியாமல் மறைத்துவிட்டார்

(ஜாதி)

   

3

 
   
   பாணரென்னும் இசைக்குலத்தைப் பாழ்படவே தள்ளியதால்  
   மானமுள்ள இசைத்தமிழும் மறைத்திட்டதே வழங்காமல்

(ஜாதி)

   

4

 
   
   ஏனை மொழிக்களிப்பர் ஏராள மாகப்பணம்  
   தேனார் தமிழ்க்களிக்கத் தினையளவு மில்லைமனம்

(ஜாதி)

   

5

 
   
   ஆனைதனைக் கட்டத்தொடர் தானெடுத்துக்  

கொடுப்பதைப்போல்

 
   ஏனைமொழிக் கிணங்கிஇருந் தமிழைத் துரத்துகின்றார்

(ஜாதி)

   

6

 
   
   தென்னாட்டு நாகரிகம் தெரியாமல் பழிதூற்றி  
   மன்னாட்டு நாகரிகம் மாணதென மகிழ்ந்துரைப்பார்

(ஜாதி)

   

7

 
   
   தாய்மொழிக ளில்தமிழே தலைமையா யிருந்தாலும்  
   சேய்மொழி யெனத்திருத்தம் செய்யாமல் ஒதுக்கிவிட்டார்

(ஜாதி)

   

8

 
   
   தேசுபெறு கலைநூல்கள் தெரியாமல் ஒழித்ததுடன்  
   பாஷையையுங் கெடுக்கவின்று பலமாய்மார் தட்டுகின்றார்

(ஜாதி)