அருந்தமிழுக்கு
ஹிந்தி ஆமோச மானம் |
|
ஆனைக்கும்
பூனைக்கும் அறையுப மானம் |
|
|
|
2 |
|
|
|
செந்தமிழ்
பிறந்தது செப்பொணாப் பழமை |
|
இந்திஐந்து
நூற்றாண்டே எழுந்தசிற் றிளமை |
(அருந்) |
|
|
3 |
|
|
|
இலக்கியம்
நிறைந்ததும் இனியசெந் தமிழே |
|
இந்தியில்
வடமொழி எழுந்திடும் அமுலே |
(அருந்) |
|
|
4 |
|
|
|
முத்தமிழ்
இலக்கணம் முனிவரை யுருக்கும் |
|
எத்தனை
ஒழுங்கீனம் இந்தியி லிருக்கும் |
(அருந்) |
|
|
5 |
|
|
|
செந்தமிழ்
ஒலிகளோ சிறுவர்க்கும் எளிய |
|
இந்தியின்
ஒலிகளோ இளைப்புற வலிய |
(அருந்) |
|
|
6 |
|
|
|
ஏனைய
மொழியின்றி இருந்தமிழ் தூய்மை |
|
இந்தியென்
றொருமொழி இல்லையே வாய்மை |
(அருந்) |
|
|
7 |
|
|
|
இந்தியின்
துணைதமிழ்க் கிம்மியும் வேண்டா |
|
இந்தியில்
தமிழ்ச்சொற்கள் எனையவோ ஆண்டார் |
(அருந்) |
|
|
8 |
|
|
|
தென்மொழிக்
கருத்துகள் தேவரும் புகழ்வர் |
|
தேவமொழிக்
கருத்தை யாவரும் இகழ்வர். |
(அருந்) |