பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 21

20

20. இந்திக்குப் பிறபாஷையார் இணக்கம்

'பாண்டியன் ஈன்ற மீனாட்சி' என்ற மெட்டு

பல்லவி

 
   பாண்டியன் பஃறுளி நாட்டுத் தமிழையே
   பலமுடன் நாட்டு
   வேண்டிய வேறுசொற் கூட்டு வேண்டாத
   விலக்கியே ஓட்டு
 

உரைப்பாட்டு

 
   இந்தியாவில் ஆரிய மொழிகளெல்லாம்
   எழுந்தவை சமஸ்கிருதத் தினின்றே
   இந்தியைக் கட்டாயமாக்கின் எமதுடன் பிறப்பென்று
   இட்டமாயவை யேற்குமன்றே
 

பல்லவி

 
   தென்னாட்டுத் திராவிட மொழிகள் - இந்தியினால்
      திறம்பிடும் வழிகள்.
 

உரைப்பாட்டு

 
   திராவிட மொழிகளிலே தெலுங்குமலை யாளமிலை
      தேவ மொழியால் வளருமன்றே
   திராட விடமின்றித் தமிழே விமரிசையாய் வளர்ந்து
      வேறு மொழியாய் வளரும் நன்றே.
 

பல்லவி

 
   இந்திக்கு மகமதியர் துணையே - உருததை
   மானுமெனுந் துணையே.
 

உரைப்பாட்டு

 
   மானத்திலும் பாஷாபி மானத்திலும் வங்காளரைப் பின்பற்றுவாயே
   ஞானத்தி லும்சுயா தீனத்திலும் நன்றாகத் தமிழ்வளர்ப் பாயே.    (பாண்டி)