1. |
இந்தியா
ஓர்தேச மென்றே இயம்புவார் அறியார் |
|
முந்தியே
நம்முன்னோ ரெல்லாம் மொழிந்தார் பரத கண்டமென |
|
|
2. |
இங்கிலீஷ்காரர்
பலத்தால் ஏகாதிபத்யம் |
|
இந்தியாவில்
வந்ததின்னும் இதற்குளாகா நாடுபல |
|
|
3. |
ஜாதி பாஷையொன்றே
யானால் சாரும்ஒரு தேசம் |
|
பேதமுள்ள
பலதேசம் பிறங்கு மிந்தியா கண்டம் |
|
|
4. |
சென்னை நாட்டிலுஞ்
சிறிய தேசம் எத்தனையோ |
|
என்ன காரணத்தினாலும்
ஏற்குமோ அவை பிறபாஷை |
|
|
5. |
சீனா ரஷ்யா
மிகப்பெரிய தேசமானாலும் |
|
காணுமோ நிறம்
பாஷையில் கடுகளவுதான் பேதம் |
|
|
6. |
அரசியற்கே
இந்தியாவில் ஆகும் ஒற்றுமையே |
|
பரசு தாய்ப்பாஷை
யழியப் பார்த்துக்கொண்டிரார் தமிழர் |
|
|
7. |
இந்தியப்
பொதுத்தலைமை இந்தி யரசாகும் |
|
ஏனைய
மாகாணமெல்லாம் ஏற்குமரசு தாய்மொழியே |
|
|
8. |
இந்தியா
ஒரே விதமாய் எல்லா விஷயத்திலும் |
|
இருக்க வேண்டுமானால்
பலர்க்கே இருமை வண்ணம் பூசிவிடும். |