பக்கம் எண் :

24செந்தமிழ்க் காஞ்சி

25

25. அழிந்துபோன தமிழ்நூல்களும் கலைகளும்

கப்பல் பாட்டு மெட்டு

ப.

 
   
   ஏல ஏல ஏல ஏல - இருந்தமிழ்நூல்  
   இறந்தொழிந்த எத்தனையோ - என்னே மாயை!  
   

உ.

 
   
   பாட்டுரை நூலுடன் வாய்மொழி பிசியே  
   அங்கதம் முதுமொழி ஆமேழு வகையும்  
   எண்வகை வனப்புடன் இருபது வண்ணம்  
   பண்ணத்தி யென்றொரு பாட்டு வகையில்  
   தொல்காப் பியத்தினில் சொல்காப்பி யம்பா.

(ஏல)

   
   ஏரணம் உருயோகம் இசைகணக் கிரதம்  
   தாரணம் மதம்சந்தம் தம்பநீர் லோகம்  
   மாரணம் பொருள்நிலம் மருத்துவம் சாலம்  
   வாரணங் கொண்டதே மாளவே பேரும்

(ஏல)

   
   தலைச்சங்க நூல்களைச் சாற்றவே கேளாய்  
   பரிபாடல் முதுநாரை முதுகுரு கோடே  
   களரியா விரையுடன் அகத்தி யம்முதல்

(ஏல)

   
   
   இடைச்சங்க நூல்களை இயம்புவேன் கேளாய்  
   வெண்டாளி கலிகுருகு வியாழமாலை யகவல்  
   பூத புராணம் புகல்மா புராணம்  
   இசைநுணுக் கத்துடன் எண்ணற்ற நூல்கள்

(ஏல)

   
   கடைச்சங்க நூல்களைக் கட்டுரைப் பேன்கேள்  
   சிற்றிசை பேரிசை கூத்தொடு வரியே  
   பரிபாடல் பதிற்றுப் பத்திற்சில பாடல்

(ஏல)

   
   பற்பல நூல்களைப் பகிருலேன் கேளாய்  
   அடிநூலே அணியியல் அவிநயத் தோடே  
   அவிந்த மாலையோ டசதிக் கோவையே  
   ஆகிரியி முறியுடன் ஆனந்த வியலே  
   இளந்திரை யத்துடன் இராமா யணமே  
   இந்திர காளியம் ஐந்திரம் இன்னும்  
   கணக்கியல் கலியாண காதையே களவு