பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 39

1

1. கடவுள் வாழ்த்து

பண் - கானடா தாளம் - முன்னை (ஆதி)

மூவுல குந்தொழும் முத்தொழில் முதல்வா
முன்னிய தமிழிசை யின்னிலை யுறவா
முனைந்தருள் வாய்எம் அவா.

 

2. தமிழே முதல் தாய்மொழி

'கொலுமவரெகத' என்ற மெட்டு

ப.

 
   
   தமிழே முதல்தாய் மொழி தன்னிகர் தானே  
   

து. ப.

 
   
   இமிழ்கடல் சூழுலகில் இருமுது பெற்றோர்பெயர்  
   எழில்தமி ழாகவே இருக்கின்ற வகையானே

(தமிழே)

   

உ.

 
   
   குமரிநிலத்தென் தோன்றிக் குறிஞ்சி முதல்முந்நிலை  
   குலவி வளர்ந்தே நாற்பாக் கொண்ட தென்மொழி செம்மை  
   திமிறிய கொடுந்தமிழ் திரவிடமாகி மேலைத்  
   திகழும் ஆரியம் எனத் திரிந்தது மேனே

(தமிழே)

3. தமிழின்பம்

'கோரினவர மொசகுமைய' என்ற மெட்டு

ப.

 
   
   பேரிலுந் தமிழ்இனிமை தங்கும் பேரின்ப வாரி  
   

து. ப.

 
   
   சாரும் எதுகை மோனை வண்ணம்  
   சற்றுந் தவறாது நண்ணும்

(பேரிலுந்)