1 |
|
|
|
தமிழா
உன்றன் முன்னவனே தலையாய் வாழ்ந்த தென்னவனே |
|
அமிழ்தாம்
மாரி யன்னவனே அழகாய் முதனூல் சொன்னவனே |
(தமிழா) |
|
|
2 |
|
|
|
பஃறுளி
நாட்டிற் பிறந்தவனாம் பகுத்தறி பண்பிற் சிறந்தவனாம் |
|
பகையாம்
மலையை உறந்தவனாம் பாலும் புலியிற் கறந்தவனாம் |
(தமிழா) |
|
|
3 |
|
|
|
யாழுங்
குழலும் வடித்தவனாம் யாணர் நடமும் நடித்தவனாம் |
|
ஏழை நிலையை
மடித்தவனாம் இறைவன் கழலைப் பிடித்தவனாம் |
(தமிழா) |
|
|
4 |
|
|
|
கலத்திற்
கிழக்கே சென்றவனாம் கடுகிச் சாலியைக் கொண்டவனாம் |
|
கரையில்
அடியைக் கண்டவனாம் கடலை முழுதும் வென்றவனாம் |
(தமிழா) |
|
|
5 |
|
|
|
தூங்கெயில்
மூன்றும் எடுத்தவனாம் துன்ப மழையைத் தடுத்தவனாம் |
|
ஓங்கெயிற்
பொறிகள் தொடுத்தவனாம் உயர்வான் கோபுரம் |
|
அடுத்தவனாம் |
(தமிழா) |
|
|
6 |
|
|
|
காந்தக்
கோட்டை கட்டினனாம் கடல்போல் ஏரி வெட்டினனாம் |
|
கங்கை
வடக்கும் எட்டினனாம் கயிலைப் பனிமலை நட்டினனாம் |
(தமிழா) |