பக்கம் எண் :

42செந்தமிழ்க் காஞ்சி

3

3

 
   
   உழுவா ருலகத்திற்கே ஆணியென்பார் - அவர்  
   ஒருவரையுந் தொழாத உயர்ந்த பண்பார்  
   வழுவாது முறைசெய்யக் காவலன்பார் - இன்றேல்  
   வசிட்டனும் மறையோத வழியில் என்பார்

(தென்)

6. திருக்குறள் படித்தல்

பண் - முல்லை                         (மோகனம்) தாளம் - முன்னை

ப.

 
   
   திருக்குறள் படித்தல் வேண்டும் - தென்னோரே யாண்டும்  
   

து.ப.

 
   
   இருக்கிற பகல்தொறும் இரண்டொரு குறள்களே  
   இசையினும் தெளிபொருள் இலகுற மீண்டும் மீண்டும்

(திருக்)

   

உ.1

 
   
   பிறப்பினிற் சிறப்பில்லை பெருமையுஞ் சிறுமையும்  
   பேணுந் தொழிலொழுக்கம் பெற்றியாலே விளைக்கும்  
   இறப்புவரை தமிழன் இழிவுற வகுத்தின்றும்  
   ஏமாற்றும் ஆரியனை ஈமேற்றவே முளைக்கும்

(திருக்)

   

2

 
   
   இல்லறம் நல்லறமாய் இயற்றித்தம் வாழ்நாளெல்லாம்  
   இன்ப மைந்தும் ஒருங்கே இனிது நுகர்ந்து நன்றே  
   தொல்லுல காண்ட சேரசோழ பாண்டியர் வழி  
   தோன்றிய தமிழரே துரைத்தனஞ் செய்ய இன்றே

(திருக்)

   

3

 
   
   ஆயிரத்து முந்நூற்று முப்பதருங் குறளும்  
   பாயிரத்தோடு நன்றாய்ப் படித்தபின்னே யொருக்கப்  
   போயொருத்தர் வாய்க்கேட்கப் புதிய பொருளுமுண்டோ  
   வாயறப் பலரையும் வணக்கிய வீற்றிருக்க(த்)

(திருக்)