பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 59

2

2

 
   
   ஆரியரே பெரும்பால் ஆசிரியன்மார் அங்கே  
   அமர்ந்திருந்தார் அத்தீங்கை அகற்றவே பல்துறையும்  
   
   சீரிய தமிழரே சிறந்த தலைவரெனச்  
   சேர்ந்து பணிசெய்யவே செய்தனர் நன்முறையே

(சேலங்)

   

3

 
   
   பொன்னிற நெடுமெய்யும் இன்னழ கொண்முகமும்  
   மன்னவர் குலமென எண்ண வுறுவனவே  
   
   புன்னகை யொடுதிரு மண்நுதல் அணிசெய  
   மென்னடை நடந்துபோம் விண்ணவனோ எனவே

(சேலங்)

27. தமிழ்த்தொண்டர் படைச்செலவு

'ராசன் வந்தனம்' என்ற மெட்டு

1

   படையெடுக்கவே கடு நடைதொடுக்கவே
   பாண்டியன் வளர்த்த கழகப் பாட்டுடைத்தமிழ் மறவரே
   பாரெலாம் ஊரெலாம்
      பண்டை முத்தமிழ் பரப்புவோம்
         இடம்வலம் இடம்வலம்
         இடம்வலம் இடம்வலம்
 

2

 
   பரவைதன் னடிதொழப் பணித்த பாண்டியன்
   பாங்கிலே வளர்ந்து பண்பில்ஓங்கு பாண்டி மறவரே
   பரண்மனை அரண்மனை
      பைந்தமிழையே பரப்புவோம்
         இடம்வலம் இடம்வலம்
         இடம்வலம் இடம்வலம்