பக்கம் எண் :

58செந்தமிழ்க் காஞ்சி

25

25. தமிழைக் காட்டிக்கொடாமை

'எளியோரைத் தாழ்த்தி' என்ற மெட்டு

ப.

 
   
   கனவாகும் பொழுதும் கண்ணான தமிழைக்  
   காட்டிக் கொடுத்திடக் கருதாதே.  
   

உ.

 
   
   மனம்போலப் பொருளும் மாவேந்தப் பதமும்  
   மருவினும் சாவாத மருந்தாகுமோ  
   
   எனவேனும் உடமை எதுவேனும் நிலைமை  
   இறந்தபின் உடன்வந்தே யிருந்தாகுமோ

(கன)

26. சேலங்கல்லூரி முதல்வர் இராமசாமிக் கவுண்டர்

    பண் - ‘காப்பி‘                         தாளம் - முன்னை

ப.

 
   
   சேலங்கல் லூரித்தலை சிறந்த முதல்வர் என்றம்  
   சாலும்புகழ் இராமசாமிக் கவுண்டர் அன்றோ.  
   

து. ப.

 
   
   ஞால முழுதும்தமிழ் நன்கு பரவ அடி  
   கோலவந் தவரென்று கூறுதல் மிகையுண்டோ

(சேலங்)

   

உ. 1

 
   
   வாணியம் பாடிக்குப்பின் சேலங்கல் லூரியிரு  
   பானொடு மூன்றாண்டாகப் பதிந்திரண்டாம் நிலையை  
   
   மாணவே முதலென மாற்றி யேழைமாணவர்  
   மாபெருந் தொகையராய்த் தேறச்செய்தார் கலையே

(சேலங்)