பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 57

24

24. தமிழ்ப்பற்று

    பண் - ‘சிந்துபைரவி’ தாளம் - முன்னை

 

ப.

 
   
   பற்றிருந் தாலும் போதும் பைந்தமிழ்மேல்  
   

உ. 1

 
   
   கற்றவரே தமிழைக் காட்டிக் கொடுத்து நின்றார்  
   கல்லாத பேரே தமிழ்க் காவல ராகி வென்றார்

(பற்றி)

   

2

 
   
   சின்னச் சாமி யிளைஞன் செந்தமிழ் கற்ற துண்டோ  
   அன்னைத் தமிழைக் காக்க அழலிற் குளித்தா னன்றோ

(பற்றி)

   

3

 
   
   கோடிக் கணக்கிற் செல்வம் குவித்தார் கொடாத கண்டர்  
   ஓடியாடித் தொகுத்தே உதவினார் ஏழைத் தொண்டர்

(பற்றி)

   

4

 
   
   மாண்டபின் னருந்தமிழ் மாணவ னென்ன அன்பு  
   பூண்டனர் போப்பையரும் பொறிக்கக் கல்லறை முன்பு

(பற்றி)

   

5

 
   
   காசை யிழக்கவேண்டா கடுஞ்சிறை செல்ல வேண்டா  
   பேசும் தமிழின் தூய்மை பேணியே காக்க வேண்டும்

(பற்றி)

   

6

 
   
   நற்றமிழ் மாண்பை யெல்லாம் நாடி யறியா தோரும்  
   பெற்றவள் போலே யின்று பிழைக்க வுதவும் பாரும்

(பற்றி)