பக்கம் எண் :

56செந்தமிழ்க் காஞ்சி

22

22. எது தமிழ்?

'தயார் தயார்' என்ற மெட்டு

ப.

 
   
   எது தமிழ் - எந்நாளும்  
   

து. ப.

 
   
   இறையனா ரகப்பொரு ளுரைமுதல்  
   இதுவரை யுளபல வகைகளுள்

(எது)

   
   முதுகுமரியில் முகிழ்த்து மலர்ந்த முதன்மை யுலகத் தாய்மொழி  
   மதுரையில் முதற்கழகம் ஆய்ந்த மதுரம் மிகுந்த தூய்மொழி  
   
   மறைமலை யடிகளே நிறைநிலை  
   அறைமொழியது பிறமொழியொலி  
   இறைமொழியெதும் இறையுமேயிலி

(எது)

23. தமிழன் குலம் 'தமிழன்'

    பண் - சிந்துபைரவி தாளம் - முன்னை

ப.

 
   
   நானொரு தமிழன் நான்வந்த வழியே  
   தேனினு மினிய செந்தமிழ் மொழியே  
   

து. ப.

 
   
   வானுற வெனும்பொய் வடமொழி யொழியே  
   வண்டமிழ் கெடவழி வகுத்தது பழியே

(நானொரு)

   

உ.

 
   
   கோனவன் பிறப்பும் குடிகளின் வழியே  
      குலைந்திடும் ஆட்சியும் குறுவாழ்வுச் சுழியே  
   மாநிலத் தொழில்கள் மனங்கொள்ளும் உழியே  
      மருவிய குலவினம் மன்னில மொழியே

(நானொரு)