இது தாய் சொல்வது, நாதநாமக்
கிரியையில் நீட்டிப் பாடவேண்டும்.
|
ரா ரா
ரோ ரா ரா ரோ..... |
|
ரா ரா
ரோ ரா ரா ரோ..... |
|
|
1. |
கண்ணே!
உறங்கு உறங்கு - என் |
|
கண்மணி
உறங்கு உறங்கு |
|
பொன்னே!
உறங்கு உறங்கு - என் |
|
பொன்மணி
உறங்கு உறங்கு |
|
|
2. |
காலுங்
கடுத்தே - நான் |
|
கடுகி
வழிநடந்தேன் |
|
பாலும் கையிலேந்தி
- நான் |
|
பார்த்தகண்ணும்
பூத்துப்போச்சு |
|
|
3. |
பச்சைக்
கிளியே! நீ |
|
பனிக்கெல்லாம்
எங்கிருந்தாய்? |
|
இச்சித்த
தினைக்கதிரை |
|
ஏக்கமறத்
தின்றாயோ? |
|
|
4. |
மாடப்
புறாவேநீ! |
|
மழைக்கெல்லாம்
எங்கிருந்தாய்! |
|
காடான
காடெல்லாம் - நீ |
|
கண்டுவரப்
போனாயோ? |
|
|
5. |
கூவுங்
குயிலே! நீ - முன் |
|
குளிருக்கே எங்கிருந்தாய்? |
|
மூவா
மருந்தே - நான் |
|
முத்தமிடக்
காணேனே. |
|
|
6. |
கப்பல்
தனித்தேறி - முன் |
|
கைப்பொருளைத்
தேடப்போன |
|
அப்பன்
வரக்காணேன் - என் |
|
ஆசைக்கிளி
நீஉறங்கு. |