பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 87

17ஆம

17ஆம் பாடம்

சிட்டுக்குருவிப் பாட்டு

'சித்தாதி சித்தர்கள்' என்ற மெட்டு

   1. சிட்டுக் குருவி முகட்டில் சிறுகூடு
     கட்டி யிருக்குது பார் - அதில் இரண்டு
  முட்டை இருந்தன பார்.
   
   2. முட்டை வெடித்தது குஞ்சு பொரித்தது
     எட்டி எட்டிப் பார்க்குதே - இரண்டு கண்ணும்
  தட்டித் தட்டிப் பார்க்குதே.
   
   3. இன்னும் உரோமந்தான் ஒன்றும் இல்லை நன்றாய்க்
     கண்ணும் தெரியவில்லை - அது தெரிய
  இன்னும் சிலநாள் செல்லும்.
   
   4. தாய்க்குருவி தூரம்போய்த் தான்இரை தேடி
     வாய்க்குள்ளே வைத்துக்கொண்டு - வந்து குஞ்சுக்கு
  வாய்க்குள்ளே வைக்குது பார்.
   
   5. அந்தப் பக்கத்திலே தந்தைக் குருவியும்
     குந்தி யிருக்கிறது - இதை நமது
  தந்தைக்குச் சொல்வோம் வாரும்.