பக்கம் எண் :

88செந்தமிழ்க் காஞ்சி

18ஆம

18ஆம் பாடம்

வாழைமரப் பாட்டு

'கத்தரிக்காய் கொண்டுவா' என்ற மெட்டு

 

ப.

 
     
  வாழையைப் பார் தோழா - வகையுடனே  
  வாழையைப் பார் தோழா.  
     
 

உ.

 
     
   1. கீழேயிருந்து பக்கம்  
  கிளைத்துள்ள கன்றுகளே  
  தாயொடு பிள்ளைகள்போல் - தழைத்திருக்கும்

(வாழை)

     
   2. வழுக்கை மரத்தின் மேலே  
  பழுத்த பழத்தைப் பாராய்  
  கிளிப்பிள்ளை கொத்தித் தின்று - கீழே விழுந்தும்

(வாழை)

     
   3. உலர்ந்த தண்டை இதோ பார்  
  ஒடுங்கின தீரமில்லை  
  கிழமையில் நம்மழகும் - கெடுமிவ்வாறே

(வாழை)

     
   4. கனிய பழத்தைத் தின்றால்  
  இனிமையாய் இருக்குதே  
  இனிமேலே நாம் பிறர்க்கே - இனியசெய்வோம்

(வாழை)

     
   5. உறுப்புகள் யாவும் நன்றாய்  
  உதவிடும் வாழையைப் பார்  
  ஒருப்பட எல்லார்க்கும் - உதவுவோம் நாம்

(வாழை)

     
   6. கோழிதன் குஞ்சுகளைக்  
  கூட்டி யணைப்பதுபோல்  
  வாழைப்பூப் பிஞ்சுகளை - மறைப்பதைப் பார்

(வாழை)