பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 89

19ஆம

19ஆம் பாடம்

கொக்கும் நரியும்

'முத்திநெறி அறியாத' என்ற மெட்டு

   1. ஒருஊரில் ஒருகொக்கும்
  ஒருநரியும் இருந்தனவே
  ஒருநாளில் நரிகொக்கை
  ஒருவிருந்துக்(கு) அழைத்தது பார்
   
   2. குறித்த நாளும் வந்தவுடன்
  கொக்குநரி வீட்டுக்குப் போய்ப்
  பொறுத்திருந்து பசிமிகவே
     போசனத்தில் ஆசைவைக்க
   
   3. தட்டையான கலத்தில் கஞ்சித்
     தண்ணீரை விட்டு நன்றாய்க்
  குட்டைநரி குடித்ததுவே
  கொக்குக்கோ முடியவில்லை
   
   4. கொக்கதன்பின் பதில்விருந்தில்
     கூசாவில் கறிவைத்துத்
  தக்கபடி தின்றுதின்று
     தான்ஏப்பம் இட்டதுவே
   
   5. கூசாவில் நரிதலையைக்
     கொண்டுபோக முடியாமல்
  பேசாமல் இருந்திருந்து
     பிறகுதான்போய் விட்டதுவே
   
   6. எப்படிநாம் பிறருக்கு
     ஏதொன்றைச் செய்கிறோமோ
  அப்படியே பிறர்நமக்கும்
     ஐயமறச் செய்திடுவார்.