பக்கம் எண் :

96செந்தமிழ்க் காஞ்சி

29ஆம

29ஆம் பாடம்

வாசிக்கும் முறை

'கரிவதனா ஈசன்' என்ற மெட்டு

   1. எழுந்து நின்றதும் நூலை இடக்கையில் பிடிப்பாய்
  அழுந்த ஒலித்துப் பொருள் அறியவே படிப்பாய்
   
   2. நேராக நின்று கைகால் நெகிழ விடாதே
  மார்புமுன் நூலைப்பிடி முகம்மறைக் காதே
   
   3. காற்புள்ளி யென்ற காமா கண்டொரு நொடியில்
  மேற்செமிக் கோலனுக்கு மேலொரு நொடிநில்
   
   4. கோல னிருக்குமிடம் குறித்துமுந் நொடிநில்
  சீல முற்றுப் புள்ளிக்குச் சேர்த்துநால் நொடிநில்
   
   5. ஏற்றியும் இறக்கியும் இடந்தகக் குரலே
  மாற்றி மாற்றி வாசிப்பாய் மாண்பது நாலே.