பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 95

5
   5. இரண்டுமூன் றாய்ப்பல தளிர்கள் விட்டு - நன்றாய்த்
  திரண்டு வளர்ந்தன தினந்தினமும்
   
   6. நாற்றுகள் அரையடி ஆனவுடன் - நீக்கி
  வெற்றிடம் நீர்விட்டு நட்டுவைத்தேன்
   
   7. இலைகளும் கிளைகளு மாகவாய்ந்து - நல்ல
  விலையான காய்களைக் காய்த்தனவே!

28ஆம் பாடம்

மாணவர் காலை வேலை

'ஜோர் ஜோர் ஜோர் ஜோர் ஜோர் மைனா' என்ற மெட்டு

   1. காலையி லெழுந்திருந்து கடவுளைத் தொழுதிடாய்
  சீலச் செயல்களெல்லாம் சீர்பெற முடித்திடு
   
   2. பல்லைப் பொடியால் தேய்த்துப் பாலைப்போல் விளக்கியே
  நல்ல நீரில் குளித்து நல்கும் உணவை உண்ணுவாய்
   
   3. பாடத்தைப் படித்து நல்ல பயனை மனத்தில் பதித்தபின்
  நாடிப் பெற்றோர்க்கு வேலை நயந்து திருந்தச் செய்குவாய்
   
   4. வேளை யானவுடனே விரும்பிப் புத்தகத்துடன்
  சால விரைந்துபாட சாலைக்குச் செல்லுவாய்.