பக்கம் எண் :

94செந்தமிழ்க் காஞ்சி

26ஆம

26ஆம் பாடம்

குழந்தைக்குச் சோறூட்டல்

   1. தின்னாய் திருக்குழந்தை - இந்தத்
  தீஞ்சோற்றைத் தின்னாய்கொஞ்சம்
   
   2. அப்பனுக்கு இரண்டுருண்டை - வெகு
  ஆசையுடன் தின்னாய் நீ
   
   3. அன்னைக்கும் ஓர்கவளம் - நீ
  அன்பாகத் தின்பாயே
   
   4. அக்காளுக்கு ஓர்பிடிதான் - நீ
  அழகாகத் தின்பாயே
   
   5. அண்ணனுக்கு ஒரேஒரு வாய் - இன்று
  ஆனந்தமாய்த் தின்பாயே
   
   6. நாய்வந்து தின்றுவிடும் - அதற்குள்
  நன்றாகத் தின்றுகொள்ளேன்
   
   7. இன்னும் இருபருக்கை - நீ
  இன்பமுடன் தின்றுவிடு.

27ஆம் பாடம்

கத்தரித் தோட்டம்

     'இந்த உடலை நம்பி' என்ற மெட்டு
   
   1. கத்தரிக்காய்த் தோட்டக் கதையைக் கேளாய் - இது
  பத்திரமாய் மனம் பதியக் கேளாய்.
   
   2. மண்ணை முதல்வெட்டிக் கரம்பையிட்டு - கட்டி
  மண்ணை உடைத்தபின் உரத்தையிட்டேன்.
   
   3. மேடு பள்ளமின்றி மிகத்திருத்தி - மிக
  மேலான பழத்துள்ள விதை விதைத்தேன்.
   
   4. காலையும் மாலையும் தண்ணீர்விட - இது
  நாளையி லேசிறு முளைகள் கண்டேன்.