1. |
ஓர்இடைக்
குடியிருப்பாம் - அதில் |
|
உள்ளஇரு
பூனைகளும் ஒருதரமாய் |
|
|
2. |
திருடிய
பாற்கட்டி - இரண்டு |
|
சிறிதும்
பெரியதுமாய் இருந்தனவே |
|
|
3. |
எனக்கே பெரியதென்று
- பூனை |
|
இரண்டும்
தனித்தனியே முரண்டு செய்து |
|
|
4. |
கொடியதோர்
குரங்கினிடம் - கொடுத்துக் |
|
குறையறப்
பகிர்ந்திடக் கூறினவே |
|
|
5. |
குரங்கோ
பெருங்கட்டியைத் - தனது |
|
கூரிய பல்லாற்
கடித்துக் குறைத்துத் தின்று |
|
|
6. |
சிறிதைப்
பெரிதாக்கி - முன்போலப் |
|
பெரிதையும்
சிறியதாய்ப் பிரித்துண்டது |
|
|
7. |
இப்படியே
எல்லாம் - தின்று |
|
ஏப்பமிட்டுக்
கொண்டுநன்றாய் இருந்தது பார் |
|
|
8. |
இரண்டு
பூனைகளும் - இழந்து |
|
ஏங்கி ஏங்கி
இருப்பிடம் ஏகினவே. |