செய்யும - செய்ம்ம - செய்வ. செய்யுமன - செய்ம்மன - செய்வன. உண்ணுமான் - உண்மான் - உண்பான். நடக்குமான் - நடப்பான். இனி, செய்வு நடப்பு என வுவ்வீறும் புவ்வீறும் பெற்ற தொழிற்பெயர்களே பாலீறுபெற்று எதிர்கால வினைமுற்றாகும் என்று கொள்ளவும் இடமுண்டு. செய்பு + ஆன் = செய்வான், நடப்பு + ஆன் = நடப்பான். “ ஆ ஓ வாகும் பெயருமா ருளவே” | (தொல். 679) |
என்றபடி, செய்யுமார் என்பது செய்யுளில் வினையாலணையும் பெயராகும்போது, செய்யுமோர் என்றாகும். வினையாலணையும் பெயர் வினைமுற்றும் பெயரெச்சத்தோடு கூடிய சுட்டுப்பெயருமாக இருவகை வடிவிலிருக்கும். கா : இ.கா. | நி.கா. | எ.கா. | (1) செய்தான் | செய்கின்றான் | செய்வான் | (2) செய்த(அ)வன் | செய்கின்ற(அ)வன் | செய்யுமவன் - செய்யுபவன் செய்பவன். | நடந்த(அ)வன் | நடக்கின்ற(அ)வன் | நடக்குமவன் - நடக்குபவன் - நடப்பவன். |
அகத்தியர் காலத்திற்கு முன்பே, வினைமுற்றுகள் பாலீறு பெற்றுவிட்டன. அஃறிணைப் படர்க்கையிருபாற்கு மட்டும் செய்யும் என்னும் முற்றே இன்றும் உலக வழக்கில் வழங்குகின்றது; ஆண்பாற்கும் பெண்பாற்கும் செய்யுளில் வழங்கும் செய்யும, செய்ம்ம என்பவை செய்யுப செய்ப என்றும் திரியும். இவற்றுள் முன்னவை பலவின்பாலுக்கும், பின்னவை பலர்பாலுக்கும் வரையறுக்கப்பட்டன. ம - ப, போலி. இனி, செய்பு + அ = செய்ப என்றுமாம். வினைமுற்றுகள் எச்சப்பொருளில் வழங்குவதுண்டு. கா : செய்வான் வந்தான் படிப்பான் வந்தான் செய்ம்மார் வந்தார்.
|