வியங்கோள் : செய் + அல் + க = செய்யற்க. செயல்வினை : இஃது இருவகை. (1) துணைவினை பெற்றது கா : | } | | செய்தானல்லன் | | செய்தானில்லை | படர்க்கை | செய்ததிலன் | ஆண்பால் | செய்ததில்லை | இறந்த கால | செய்திலன் | வினைமுற்று | | செய்யவில்லை (முக்காலத்திற்கும் பொது) |
இங்ஙனமே பிற பாலிடங்கட்கும் ஒட்டுக. இல்லையென்னும் சொல் இருதிணையைம்பால் மூவிடங்கட்கும் பொது. (2) இடைதொக்கது. கா : செய்யேன், செய்யாய், செய்யான். இது எதிர்கால வினை ; வழக்கத்தைக் குறிக்கும்போது முக்காலத்தையும் தழுவும்; இதில் இறுதியிலுள்ள உயிர் குறிலாயின் நீளும். செய்யாய் செய்யீர் என்னும் முன்னிலை வினைகள், முறையே, ஒருமை பன்மை ஏவலாகவும் வரும். காலங்காட்டும் இடைநிலையின்மை எதிர்மறை குறிக்கும் என்பர் கால்டுவெல் ஐயர்1 வினையெச்சம் செய்யாது (எதிர்மறைத் தொழிற்பெயர்). செய்யாமை (எதிர்மறைத் தொழிற்பெயர்). செய்யாமை -செய்யாமே. செய்யாமை - செய்யாமல். துவ்வீற்றுப் படர்க்கை ஒன்றன்பாற் பெயர் வினையெச்சமாகக் கூடியதை, பெரிது உவந்தான், நன்று சொன்னான் என்னுந் தொடர்களாலுணர்க. முற்றெச்சம் = வினையாலணையும் பெயர் + ஆய், ஆன. செய்யாது என்னும் வாய்பாட்டில் வரும் அல்லாது இல்லாது என்னும் குறிப்புவினைகள், அல்லது (அல் + அது), அன்று (அல் + து), இல்லது (இல் + அது) இன்று (இல் + து) எனக் குறுகும்.
1. C.C.G. p. 361
|