மாள | : | 'தவிர்ந்தீக மாள.‘ மாள = முடிய, முற்றிலும். |
| | |
ஈ | : | சென்று + ஈ = சென்றீ = சென்றாய். |
| | |
யாழ | : | “ யாழநின்” = யாழ்போலும் இனிய நினது (கலித்.18). |
| | |
யா | : | யா பன்னிருவர் மாணாக்கர். யார் அல்லது யாம் என்பதன் ஈற்றுமெய் |
| | விட்டுப்போயிருக்கலாம். யா என்னும் அஃறிணைப் பன்மை வினாப்பெயரே |
| | ஒரு காலத்தில் உயர்திணைக்கும் வழங்கிற்று. |
| | |
கா | : | 'இவள் காண்டிகா' காண்டி = பார். கா = காத்துக் கொள். |
| | |
பிற | : | 'ஆயனையல்ல பிற' = ஆயனையல்லாத மற்றவை. |
| | |
பிறக்கு | : | 'பிறக்கதனுட் செல்லான்'. பிறக்கு = பிறகு. |
| | |
அரோ | : | அரன் என்பதன் விளி. அரோ = சிவனே. |
| | |
போ | : | இது வெளிப்படை. மறுப்புப் பொருளில் உலக வழக்கிலும் வழங்கும். |
| | |
மாதோ | : | மகடூஉ முன்னிலை. மாதோ = பெண்ணே. |
| | |
இகும் | : | 'கண்டிகும்.' இகும் = இடும். இடுதல் = கொடுத்தல். |
| | |
சின் | : | உரைத்து + ஈ = உரைத்தீ. உரைத்தீயினோர் - உரைத்தீசினோர் - |
| | உரைத்திசினோர்.ஈ துணை வினை. ஈதல் = கொடுத்தல். என்றீயேன் |
| | (என்றிட்டேன்) - என்றியேன் - என்றிசேன் - என்றிசின். |
| | |
குரை | : | குரு + அ = குர - குரை = பெருமை. ஒ.நோ: குரு + அவு = குரவு. குரவு + |
| | அன் =குரவன் = பெரியோன். “ பல்குரைத் துன்பம்” , “ பெறலருங் குரைத்தே.” |
| | |
ஓரும் | : | ஓர் = உணர், ஒன்று. “ அஞ்சுவதோரும் அவா” = அஞ்சுவதொன்றும் |
| | அவாவே; (அல்லது) அஞ்சுவது அவா, அதை நீர் உணரும். அதனோரற்றே |
| | அதனொடு ஒரு தன்மைத்து. அன்றே = அல்லவோ. போலும் இருந்து முதலிய பிறசொற்கள் வெளிப்படை. |