பக்கம் எண் :

170ஒப்பியன் மொழிநூல்

இழிவு. அதுபோல் கடன்சொற்களால் பிறமொழிக்கு வளர்ச்சி; தமிழுக்கோ தளர்ச்சி. முதலாவது, பிணிக்கு நோய் என்று தமிழ்ச்சொல்மட்டும் தமிழ்நாட்டில் வழங்கியது; பின்பு ஆரியம் வந்தபின் வியாதி என்னும் சொல் வழங்கிற்று; அதன் பின் ஆங்கிலம் வந்தபின் சீக்கு என்னும் சொல் வழங்குகிறது. இதுவே தமிழுக்குப் பிறமொழியா லுண்டாகும் வளர்ச்சி; இனி இந்தி வரின் பீமாரி என்னும் சொல்லும் வழங்கும்போலும்!

தென்மொழியை வடமொழியோடு கலவாமல் தனியே வளர்க்க வேண்டும். 'தமிழ்வெறி' என்று தமிழ்ப் பகைவர் கூறுவதற்கு இது ஆரியநாடன்று. இந்தியா முழுதும் ஒருகால் பரவியிருந்த தமிழ் இன்று தென்கோடியில் ஒடுங்கிக் கிடக்கின்றது. தன்னாடான இங்கும் தமிழுக் கிடமில்லையென்றால் வேறெங்கது செல்லும்? தமிழ்நாடொழிந்த இந்தியா முழுதும் ஆரியத்திற் கிடமாயிருக்கும்போது, இத் தமிழ் நாட்டையாவது ஏன் தமிழுக்கு விடக்கூடாது? தமிழ் இதுபோது அடைந்துள்ள தாழ்நிலையும், இற்றைத் தமிழர் தாய்மொழியுணர்ச்சி யில்லாதிருப்பதும், அவரது அடிமை நிலையைச் சிறப்பக் காட்டும். பார்ப்பனரும் அபார்ப்பனரும் இனிமேல் ஒற்றுமையாயிருந்து தமிழைச் சிறப்பாய் வளர்க்கவேண்டும்.

தமிழ்நாட்டுக் கிழார்களும் வேளிரும் மடங்களும், திருப்பனந்தாள் மடத்தைப் பின்பற்றித் தமிழை வளர்த்தால் அது சிறந்தோங்கும்.

புறவுரை

இப் பொத்தகத்திற் கூற விரும்பிய சில செய்திகள் விரிவஞ்சி விடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பிற மடலங்களுள்ளும் பகுதிகளுள்ளும் கண்டுகொள்க.

இங்குக் கூறிய சில சொன்மூலங்கள் மாறலாம். ஆனால் மொழிகளைப்பற்றிய பெரு முடிபுகள் மாறா.

செய்யுது என்னும் தன்மை ஒருமை எதிர்கால வினைமுற்றில் உது என்பது ஈறென்றும், முன்மைச் சுட்டாகிய ஊகாரத்தினின்று நூன் நூம் என்பவை தோன்றினவென்றுங் கொள்ளலாம். இவை புது மாற்றங்களாம்.