பக்கம் எண் :

உலக முதன்மொழிக் கொள்கை 171

“ ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்று - மாங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்”

“ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ

தெங்கும் காணோம்

பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சிசொலப்

பான்மை கெட்டு

நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல்

நன்றோ சொல்லீர்

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை

செய்தல் வேண்டும்.”

- பாரதியார்