துணைவினைப்பேறு - எழுந்திரு, கொண்டாடு, பாடுபடு. முன்னொட்டுச்சேர்பு : முற்படு, உட்கொள். பின்னொட்டுச்சேர்பு : பொக்கணம், ஏராளம். அடைமுதல் : நல்லபாம்பு, செந்தாமரை, முடக்கொற்றான். சினைமுதல் : வாற்குருவி, கொண்டைக்கடலை. அடைசினைமுதல் (வண்ணச்சினைச்சொல்) : செங்கால் நாரை. ஒட்டுப்பெயர் : இரெட்டியைக் கெடுத்த வெள்ளி, தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன். ஒரு வேர்ச்சொல் பல வழிக்கருத்துகள் கிளைக்கத்தக்க மூலக் கருத்தையுடையதாயின், அதனின்றும் ஏராளமான சொற்கள் பிறக்கும். கா : வள் | | + இ = வள்ளி - வளி. | + ஐ = வள்ளை - வளை | + அம் = வளையம் - வலயம் (வ.) | + அல் = வளையல் | + வி = வளைவி | + அகம் = வளாகம் | + அம் = வள்ளம் - வளம் - வளமை - வளப்பம். வளைவு முதிர்ச்சியையும் வளத்தையுங் குறிக்கும். | + அர் = வளர் | + அல் = வள்ளல் | + ஆர் = வளார் |
வள் | | + தி = வட்டி, | + இல் = வட்டில் | + அணை = வட்டணை | = வண்டி | வண்டி - பண்டி - பாண்டி | + இல் = பாண்டில் | + அன் = பாண்டியன் | + து = வட்டு | + அகம் = வட்டகம் - (வட்டுகம்) | = வண்டு | - வட்டுவம் |
|