பக்கம் எண் :

தமிழ்மொழித் தோற்றம் 95

 

+ தம் = வட்டம் (வ்ருத்த, வ.)

+ அகை = வட்டகை

+ ஆரம் = வட்டாரம்

+ தை = வட்டை - வடை

வட்டம் என்பதை நிலைமொழியாகக்கொண்டு வட்டக்கெண்டை வட்டப்பாலை முதலிய தொடர்மொழிகளும், வருமொழியாகக் கொண்டு ஆலவட்டம் இளவட்டம் கனவட்டம் காளிவட்டம் பரிவட்டம் முதலிய தொடர்மொழிகளும் தோன்றும்.

வள் -

வாளம் - வாளி.
வாளம் - வாணம் - பாண (வ.)

வாளம் = வளைந்தது, வளைந்த மதில். ஒ.நோ: சக்கரவாளம்.

L. vallum, a rampart; Ger. Wall; A.S. weall; E. wall.

வாளம் - பாளம் (மதில்போன்ற கனத்த தகடு).

வாளம் - வாள் (வளைந்த கத்தி). அரிவாளையும் வெட்டறுவாளையும் காண்க.

வள் - வணர் - வணங்கு.

வள் - uri (Skt.), verto (L.)

வள் - வரி - வரை. வரி + சை = வரிசை. வரி + அம் = வரம்.

வரி + அணம் =

வரணம் - வண்ணம்

வரணம் - வரணி - வண்ணி.

வண்ணம் + ஆன் = வண்ணான்.

இவற்றுள் பல சொற்கள் தனித்தனி பற்பல பொருள்களைக் குறிப்பன. அவற்றையும், வள் என்னும் வேரடியாய்ப் பிறந்த பிற சொற்களையும், எனது செந்தமிழ்ச் சொற்பிறப் பியல் அகர முதலியிற்றான் காணமுடியும்.

தமிழ்மொழி வளர்ச்சி

தமிழ்மக்கள் குறிஞ்சியிலிருந்தபோது சில சொற்களே தோன்றின. பின்பு முல்லை முதலிய ஏனைத்திணைகளுக்குச் சென்றபோது, ஒவ்வொன்றிலும் சிற்சில புதுச்சொற்கள் தோன்றின. அவற்றுள் மருதத்தில் தோன்றினவை பலவாகும். மருதத்திலும் நகரந் தோன்றியபின்னரே பல சொற்கள் தோன்றின.