பக்கம் எண் :

346நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


நேர்க்கூற்று

கண்ணகி, "நான் பாவியானேன்!" என்று அலறினாள்.

அயற்கூற்று

தான் பாவியானதாய்க் கண்ணகி கூறி அலறினாள்.

* * *

நேர்க்கூற்று

மன்னன், "கடவுளே! எனக்கு அருள் செய்க" என்றான்.

அயற்கூற்று

மன்னன் கடவுளை அருள் செய்யுமாறு வேண்டினான்.

* * *

நேர்க்கூற்று

நாவுக்கரசர், "என் கடன் பணி செய்த கிடப்பதே" என்றார்.

அயற்கூற்று

நாவுக்கரசர், தம் கடன் பணி செய்து கிடப்பதாகும் என்றார்.

* * *

நேர்க்கூற்று

என் தந்தையார், "நீ அதைச் செய்யாதே" என்றார்.

அயற்கூற்று

என் தந்தையார் யான் அதைச் செய்யக் கூடாதெனக்
கட்டளையிட்டார்.

* * *

நேர்க்கூற்று

"ஐயோ! அந்தக் கப்பல் கடலில் மூழ்கி விட்டதே" என்றான்
ரகுராமன்.

அயற்கூற்று

ரகுராமன் அந்தக் கப்பல் கடலில் மூழ்கிவிட்டதாய்க் கூறி
மிகவும் வருந்தினான்.