|
New Page 1
செந்தமிழில் வந்து வழங்குவன திசைச் சொற்களாம் என்று
சொல்வர் (புலவர்)
எ-று.
திசைச்சொல் - திசைகளில் வழங்குகின்ற தேச பாழைகளிலிருந்து
செந்தமிழில் வந்து வழங்கும் சொற்கள்.
கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டாவன: தென்பாண்டி நாடு, குட்ட
நாடு, குட நாடு, கற்கா நாடு, வேணாடு, பூழிநாடு, பன்றி நாடு, அருவாநாடு, அருவா வடதலை நாடு, சீதநாடு,
மலையமானாடு, சோழ நாடு என்பன. தென்பாண்டி நாடு - செந்தமிழ்ப் பாண்டி நாட்டுக்குத் தென்திசையிலுள்ளது.
எ-டு :
|
|
1. |
பசுவைப் பெற்றம் என்பதும்
சோற்றைச் சொன்றி என்பதும் |
} |
தென்பாண்டி நாட்டுச்சொல் |
|
|
2. |
தாயைத் தள்ளை என்பது
|
- |
குட்டநாட்டுச் சொல் |
|
|
3. |
தந்தையை அச்சன் என்பது |
- |
குடநாட்டுச் சொல் |
|
|
4. |
வஞ்சகரைக் கையர்
என்பது |
- |
கற்கா நாட்டுச் சொல் |
|
|
5. |
தோட்டத்தைக்
கிழார் என்பது |
- |
வேணாட்டுச் சொல் |
|
|
6. |
சிறுகுளத்தைப் பாழி என்பது |
- |
பூழி நாட்டுச் சொல் |
|
|
7. |
வயலைச் செய் என்பது |
- |
பன்றி நாட்டுச் சொல் |
|
|
8. |
சிறுகுளத்தைக் கேணி
என்பது |
- |
அருவா நாட்டுச் சொல் |
|
|
9. |
புளியை எகின் என்பது |
- |
அருவாவடதலை நாட்டுச் சொல் |
|
|
10. |
தோழனை எலுவன் என்பதும்
தோழியை இகுளை என்பதும் |
- |
சீத நாட்டுச் சொல் |
|
|
11. |
நல்ல நீரை
வெள்ளம் என்பது |
- |
மலையமானாட்டுச் சொல் |
|
|
12. |
தாயை ஆய் என்பது |
- |
புனனாட்டுச் சொல் |
தமிழ்நாடு ஒழிந்த நாடு பதினேழாவன: சிங்களம், சோனகம்,
சாவகம், சீனம், துளுவம், குடகம், கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம்,
வங்கம், கங்கம், மகதம், கடாரம், கௌடம் குசலம்.
|
மாமரத்தைக் கொக்கு என்பது |
- |
துளுவநாட்டுச் சொல் |
|
அகப்படுதலைச் சிக்குதல்
என்பது |
- |
கன்னட நாட்டுச் சொல் |
|
கருத்தாக இருத்தலை எச்சரிக்கை என்பதும்
|
|
சொல்லுதலைச்
செப்புதல் என்பதும் |
- |
தெலுங்க நாட்டுச் சொல் |
மற்றவையும் இப்படியே ஆங்காங்கு வருதல் கண்டுகொள்க.
ஐயோ என்பதை அந்தோ என்பது
சிங்கள நாட்டுச் சொல் என்று முன்னைய உரையாசிரியர்கள் எழுதியிருந்தாலும், அது ‘ஹந்த’ என்னும்
வடசொல்லின் சிதைவு என்று தெரிதலால், இங்குக் கொள்ளப்படவில்லை.
|