பக்கம் எண் :

திசைச்சொல் எவை?57

New Page 1

செந்தமிழில் வந்து வழங்குவன திசைச் சொற்களாம் என்று சொல்வர் (புலவர்)
எ-று.

    திசைச்சொல் - திசைகளில் வழங்குகின்ற தேச பாழைகளிலிருந்து செந்தமிழில் வந்து வழங்கும் சொற்கள்.

    கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டாவன: தென்பாண்டி நாடு, குட்ட நாடு, குட நாடு, கற்கா நாடு, வேணாடு, பூழிநாடு, பன்றி நாடு, அருவாநாடு, அருவா வடதலை நாடு, சீதநாடு, மலையமானாடு, சோழ நாடு என்பன. தென்பாண்டி நாடு - செந்தமிழ்ப் பாண்டி நாட்டுக்குத் தென்திசையிலுள்ளது.

எ-டு :

 

1.

பசுவைப் பெற்றம் என்பதும்
சோற்றைச் சொன்றி என்பதும்

}

தென்பாண்டி நாட்டுச்சொல்

 

2.

தாயைத் தள்ளை என்பது

-

குட்டநாட்டுச் சொல்

 

3.

தந்தையை அச்சன் என்பது

-

குடநாட்டுச் சொல்

 

4.

வஞ்சகரைக் கையர் என்பது

-

கற்கா நாட்டுச் சொல்

 

5.

தோட்டத்தைக் கிழார் என்பது

-

வேணாட்டுச் சொல்

 

6.

சிறுகுளத்தைப் பாழி என்பது

-

பூழி நாட்டுச் சொல்

 

7.

வயலைச் செய் என்பது

-

பன்றி நாட்டுச் சொல்

 

8.

சிறுகுளத்தைக் கேணி என்பது

-

அருவா நாட்டுச் சொல்

 

9.

புளியை எகின் என்பது

-

அருவாவடதலை நாட்டுச் சொல்

 

10.

தோழனை எலுவன் என்பதும்
தோழியை இகுளை என்பதும்

-

சீத நாட்டுச் சொல்

 

11.

நல்ல நீரை வெள்ளம் என்பது

-

மலையமானாட்டுச் சொல்

 

12.

தாயை ஆய் என்பது

-

புனனாட்டுச் சொல்

    தமிழ்நாடு ஒழிந்த நாடு பதினேழாவன: சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுவம், குடகம், கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம், கௌடம் குசலம்.

மாமரத்தைக் கொக்கு என்பது

-

துளுவநாட்டுச் சொல்

அகப்படுதலைச் சிக்குதல் என்பது

-

கன்னட நாட்டுச் சொல்

கருத்தாக இருத்தலை எச்சரிக்கை என்பதும்

சொல்லுதலைச் செப்புதல் என்பதும்

-

தெலுங்க நாட்டுச் சொல்

    மற்றவையும் இப்படியே ஆங்காங்கு வருதல் கண்டுகொள்க.

    ஐயோ என்பதை அந்தோ என்பது சிங்கள நாட்டுச் சொல் என்று முன்னைய உரையாசிரியர்கள் எழுதியிருந்தாலும், அது ‘ஹந்த’ என்னும் வடசொல்லின் சிதைவு என்று தெரிதலால், இங்குக் கொள்ளப்படவில்லை.