|
3.
|
பாராளுமன்ற ஆட்சியும், பொதுமக்களும்
பெருமக்களாதலும். |
|
4. |
அடிமைத்தன வெறுப்பும் உரிமை யார்வமும். |
|
5.
|
உருவ வணக்க வொழிப்பும் ஒரு தேவ வழிபாடும். |
|
6.
|
மனவமைதிக்கும் முன்னேற்ற முயற்சிக்கும் துணை செய்யும்
ஆங்கில நாட்டுச் சமதட்ப வெப்பநிலை. |
|
7. |
தீவு வாழ்வும், கலப்படைப் பெருக்கமும், 18ஆம் 19ஆம்
நூற்றாண்டுகளில் உலகில் 1/3 பங்கைக் கட்டியாண்டு அறிவும் பொருளும் பெருக்கிக் கொண்டமையும். |
|
8.
|
ஆராய்ச்சியாளரையும் பேரறிஞரையும் வள்ளலாரையும்
புதுப்புனைவாளரையும் புது நாடு காணியரையும் அரசும் பொதுமக்களும் ஊக்கியமை. |
|
9.
|
இங்கிலாந் தாங்கிலர் 1765-ல் நீராவிச் சூழ்ச்சியப்
பொறியும், 1829-ல் இருப்புப் பாதைச் சூழ்ச்சிய வண்டியும், 1831-ல் மின்னாக்கப்
பொறியும் புதுப் புனைந்தமையும்; அமெரிக்க ஆங்கிலர் 1835-ல் மின் தொலைவரிப் பொறியும்,
1876-ல் தொலைபேசியும், 1876-ல் ஒலிப்பதிவானும், 1878-ல் மின் விளக்கும், 1893-ல் திரைப்படமும்,
1903-ல் வானூர்தியும், புதுப்புனைந்தமையும், 1970-ல் திங்களை யடைந்தமையும். |
|
10. |
1875-ல் இலவசக் கட்டாயத் துவக்கக் கல்வியைப் புகுத்தினமை. |
|
11. |
தகுதிபற்றிப் பதவியளித்து வருகின்றமை. |
|
12.
|
மூவேறு அரசியற் கட்சிகளும், தாய்மொழியையும் தம்
இலக்கியத்தையும் பண்பாட்டையும் உயிர்நாடியாகக் கொண்டு போற்றி வருகின்றமை. |
|
தமிழர் தாழ்விற்கும் தமிழின் தளர்ச்சிக்குங்
கரணியங்கள் |
|
1.
|
மூவேந்தரும் ஆரியக் குலவொழுக்கத்
திட்டத்தையும் கூட்டுமத முறையையும் மேற்கொண்டு, ஒற்றுமையையும் அரசையும் இழந்தமை. |
|
2.
|
வேத மொழியையும் சமற்கிருதத்தையும்
திருக்கோயில் வழிபாட்டு மொழியும் வீட்டுச் சடங்கு மொழியுமாக்கித் தமிழைத் தாழ்த்தியமை. |
|
3.
|
ஆரியர் வருகைக்கு முற்பட்ட பல்துறைத்
தனித்தமிழிலக்கியம் அனைத்தும் அழியுண்ணவும், பிற்பட்ட நூல்களுட் பெரும் பாலன இறந்துபடவும்
விட்டமை. |
|
4.
|
சமற்கிருதச் சொற்களை வேண்டாது
வழங்கி, ஆயிரக் கணக்கான அருந்தமிழ்ச் சொற்கள் வழக்கறவும் இறந்துபடவுஞ் செய்தமை. |