பக்கம் எண் :

மதிப்புரை மாலை131

என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கேற்ப, உயிரொடு புணரின் உடம்படு மெய் பெறும்.

    

எ-டு: அது+அன்று=அதுவன்று, அது+ஏ=அதுவே.

  "அறத்தா றிதுவென வேண்டா"

(37)

  "அன்பீனு மார்வமுடைமை யதுவீனும்"

(74)

  "கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லதுவல்லது"

(570)

என்னுங் குறளடிகளும்,
  "அவ்விரு முதலின் தோன்றும் அதுவே"

(555)

  "அதற்குப்படு பொருளின் அதுவாகு கிளவியின்

(560)

என்னும் தொல்காப்பிய அடிகளும், இப்புணர்ச்சி யமைந்தனவாகும்.
     இனி, இதற்கு விலக்காக,
  "உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்
யவ்வரின் இய்யாம் முற்றுமற் றொரோவழி"

(164)

என்னும் நன்னூல் நூற்பாவிற்கேற்ப, அது என்னுஞ்சொல் அன்று என்னும் வருமொழியொடு குற்றுகரம்போல் உகரங்கெட்டுப் புணர்ந்து அதன்று என நின்றதே, செய்யுளில் அளபெடுத்து அதா அன்று என நீண்டும் பின்பு அதான்று எனக்குறுகியும் வந்ததாகத் தெரிகின்றது. இக்கருத்துக் கொண்டே,
  "அதுமுன் வருமன் றான்றாம் தூக்கின்"

(180)

என்று நன்னூலார் நூற்பா யாத்தார் போலும்!
  "சுட்டுமுத லுகரம் அன்னொடு சிவணி
ஒட்டிய மெய்யொழித் துகரங் கெடுமே."

(176)

என்னும் தொல்காப்பிய நூற்பாவும், முற்றுகர வீற்றுச் சுட்டுச்சொல் உயிருடன் உகரங்கெட்டுப் புணர்தலு முண்டென்பதையே, வேறொரு வகையில் உணர்த்தும்.
     மேற்கூறியவற்றால், என்றும் உயிர்முதற் சொல்முன் அஃது என் னும் ஆய்தம்பெற்ற சுட்டுச் சொல்லே வரவேண்டுமென்பது தவறென் பதும், அது என்னும் முற்றுகர வீற்றுச் சொல்லும் வரலாமென்பதும், அஃது என்பது உயிர் முதற்சொல் முன்னரேயே பெரும்பான்மை எழுவாயாகவும் சிறுபான்மை