அவற்றை யெல்லாம்விளைவிக்கவோ தேடவோ செய்யவோ பல்வேறுகுலங்கள் ஏற்பட்டன. அப் பொருள்களுள்,இன்றியமையாதவற்றிற்கு முன்னும்,தேவையானவற்றிற்குப் பின்னும், இன்புறுத்துவனவற்றிற்கு அதன் பின்னும், நாகரிகச்சிறப்புப்பற்றியவற்றிற்கு இறுதியிலும் குலங்கள்எழுந்தன. பல்வேறு பொருள்களையும் ஒருவழித்தொகுத்தற்குப் பண்டமாற்றுத் தொழிலும்,அவற்றைக் காத்தற்குக் காவல் தொழிலும், அவைதோன்றிய அன்றே அமைந்தன. தெய்வ வழிபாடும்,நோயும் துன்பமும் இன்றிக் காக்கும்காவல்பற்றித் தோன்றியதே. "மகனறிவு தந்தை யறிவு" என்றமுறைப்படி, தந்தையின் தொழில் திறமையும்மனப்பான்மையும் இயற்கையாகவே மகனுக்கமைவதாலும்,மக்கள்தொகை மிகாத தொடக்கக் காலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் சொல்லளவிலுந்தோன்றாமை யாலும், எல்லாத் தொழில்களும்தொல்வரவாகவே தொடர்ந்து செய்யப் பட்டு வந்தன.தலைமுறை மிகமிகத் தொல்வரவுத் தொழில் திறமைமிகுவதனாலும், அத் தொடர்ச்சி மேன்மேலும்போற்றப்பட்டு வந்தது. ஒருவன் தன் திறமைக்கும்விருப்பத்திற்கும் ஏற்றவாறு, எச் சமையத்திலும்தொழில் மாற முடியுமேனும், அதற்கேதுவான நிலைமைஅக்காலத்தில் ஏற்படவில்லை. துப்புரவு, ஒழுக்கம், கல்வி, செல்வம்,அதிகாரம் முதலியன பற்றியன்றி, பிறப்பினால்ஏற்றத்தாழ்வு எவருக்கும் ஏற்றிக் கூறப்படவில்லை. எல்லா உயிர்வாழ்க்கைக்கும்இன்றியமையாத உணவை விளைப்பதனாலும், நிலையாகக்குடியிருந்து விளைவில் ஆறிலொரு பங்கைக் கடமையாகவிறுத்து அரசை நிலைநிறுத்துவதனாலும்,போர்க்காலத்திற் படைஞனாகிப் பொருதுவெற்றியுண்டாக்கு வதனாலும், இரப்போர்க் கீந்துதுறப்போர்க்குத் துணையா யிருப்பதனாலும், எல்லாத்தொழிலாளருள்ளும், உழவனே உயர்ந்த குடிவாணனாகவும்தலைசிறந்த இல்வாழ்வானாகவும் கொள்ளப்பட்டான். கைத்தொழிலாளரெல்லாம் உழவனுக்குப்பக்கத் துணை வராகவே கருதப்பட்டனர். "உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா தெழுவாரை யெல்லாம் பொறுத்து." | (குறள்.1032) | "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்." | (குறள்.1033) |
|