புதுக் குலங்கள் புளியங்காரர் (வடார்க்காட்டு ஆம்பூர்வட்டத்திற் புளியம்பழக் குத்தகை யெடுப்பவர்),வளுவாதியர் (திருச்சிராப்பள்ளி புதுக் கோட்டைவட்டார வலையருள் ஒரு பிரிவினர்.) மதமாற்றத்தால் தோன்றிய குலங்கள் சமணர், பவுத்தர், கிறித்தவர்,முகமதியர். மொழிமாற்றத்தால் தோன்றியகுலங்கள் ஆங்கிலம்-சட்டைக்காரர். திரவிடம்- | (1) | சேரநாட்டுத் தமிழக் குலங்கள். | | (2) | கருநட குடக துளுநாட்டுத் தமிழக் குலங்கள். | | (3) | வடுக (தெலுங்க) நாட்டுத் தமிழக் குலங்கள். | | (4) | நீலமலைத் தமிழக் குலங்கள். |
மூவகைத் திரவிடக் குலங்கள் (1) | பெயர் மாறாதவை : எ-டு: கம்மாளன், பாணன், அடுத்தோன் (குடிமகன்), வெளுத்தேடன் (வண்ணான்). | (2) | பெயர் திரிந்தவை: எ-டு: ஈடிக, கொறச்ச, சோடர். | (3) | பெயர் மாறியவை: எ-டு: ஒக்கலிக, குருப்பு, மங்கல (வாடு). |
குலமுயர்த்தும் வழிகள் ஊண் - புலால் மறுத்தல், பச்சரிசிச்சோறுண்ணல். உடை- பிராமணர்போற் கச்சங்கட்டுதல், பிராமணர் அணியும் ஆடையே அணிதல். அணி - ஆடவர் பூணூல் அணிதல், பெண்டிர்நூற்கயிற்றில் தாலி கோத்தல். குலப்பெயர் - குலப்பெயரை மாற்றுதல்அல்லது பட்டப்பெயரைக் குலப்பெயராக ஆளுதல். ஆட்பெயர் - வர்மன் குப்தன் என்னும்ஈறுகள் கொண்ட வடசொற் பெயர் பூணல். பட்டம் - பிள்ளை, முதலியார்,செட்டியார் என்னும் பட்டங் கொள்ளுதல். மணவுறவு - மேற்குலத்திற் பெண்கொள்ளல்.
|