பக்கம் எண் :

தமிழர் வரலாறு-2123

மொழி- இயன்றவரை வடசொற் கலந்துபேசுதல், சமற்கிருதங் கற்றல், சமற்கிருதநூலெழுதுதல், அல்லது செய்யுளியற்றல்.

பழக்கவழக்கம் - ஆடவர் காலையிற்சந்தியாவந்தனஞ் செய்தல், கைம்பெண் மணமின்மை.

பூசாரி - இருவகைச் சடங்கிற்கும்பிராமணனையே பூசாரியாகக் கொள்ளுதல்.

ஆரியத்தொடர்புக் கதை-குலமுதல்வன்வேள்வியில் தோன்றின தாகவோ, ஆரியனுக்குப்பிறந்ததாகவோ, கதை கட்டிக்கொள்ளுதல்.

ஒழுக்கம்-பிராமணனுக்குத் தானம் அல்லதுதொண்டு செய்தல், இயன்றவரை பிராமணர் சடங்கைப்பின்பற்றல்.

சவ முடிவு - எரிப்பு.

இவற்றுள், எரிப்புத் தவிர, ஆரியச்சார்பான வெல்லாம் அறி யாமையாலும்அடிமைத்தனத்தாலும் நேர்வனவே. மக்கள்தொகைமிக்க இக்காலத்தில், புதைப்பினும் எரிப்பேபொருளாட்சிச் சிக்கனத்திற் கேற்றதாகும்.

குலப்பட்டம் தோன்றிய வகைகள்

(1) 

முன்னோர் பதவி - (படை) முதலியார், படையாட்சி.

(2) 

முன்னோர் வேந்தனாற் பெற்ற சிறப்பு - ஏனாதி, காவிதி, வேள்- வேளான், அரசு, எட்டி - செட்டி, முதலி, பிள்ளை.

(3) 

முன்னோர் அருஞ்செயல் - புலிகடிமால், களம் வென்றான்.

(4) 

முன்னோர் கொடிவழி - அதிகமான், மலையமான் - மலைமான், வாணன் (வாணகோவரையன்), முத்தரையன் (முத்து ராசு).

(5) 

ஊர்த்தலைவன் அல்லது குடித்தலைவன் பட்டம் - நாடான், நாட்டான், நாட்டாண்மைக்காரன், ஊராளி, கரையாளன், அம்பலகாரன், மன்றாடி, குடும்பன், கவுண்டன், உடையான்.

(6) 

தொழில் - பண்ணையாடி, மந்திரி, ஓதுவார், குருக்கள்.

(7) 

தொழிற் கருவி - சாம்பான் (சாம்பு=பறை).

(8) 

அறிவு - புலவன், பண்டிதன், பண்டாரம்.

(9) 

சிற்றரசன் தொடர்பு - வளுவாதி, தொண்டைமான்.

(10) 

பத்திநெறியாட்சி - ஆண்டி.

(11) 

வேந்தன் தொடர்பு - தேவன்.

(12) 

குலவுயர்த்தம் - பிள்ளை, முதலி.