பக்கம் எண் :

130தமிழர் வரலாறு-2

பகுத்தறிவிழப்பு: தமிழருள்தலைமையான குலத்தானாகக் கருதப்படும் மரக்கறிவெள்ளாளன், பொற்கலத்தில் நன்னீர்கொடுப்பினும் குடிக்க மறுக்கும் பிராமணன்,வெள்ளாளனின் மிகத் தாழ்ந்தவளாகக் கருதப்படும்இடைச்சி, பழமட்கலத்தில் தண்ணீர் கலந்துவிற்கும் தயிரை, வானமுதம் போல் வாங்கிக்குடிப்பது கண்டும், தான் அவனின் தாழ்ந்தவனென்றுமானமின்றிச் சொல் கின்றான்.

பிராமணரில்லா மற்றநாடுகளிலெல்லாம் என்றும் மாறக்கூடியதொழில்பற்றியே மக்கள் வகுப்புகள்ஏற்பட்டிருத்தல் கண்டும் , பிரா மணருள்ள இந்நாட்டில் மட்டும் குலங்கள் இறைவன் படைப் பென்றுகருதுவது, பகுத்தறிவின்மையைத் தெளிவாகக்காட்டும்.

தன்மான மின்மை: முதற்குலோத்துங்கன் காலத்தில், பையற் பருவத்துஆளவந்தார் வித்துவ சனகோலாகலன் என்னும் ஆக்கியாழ்வானோடு தருக்கித்து, அரசி வேத வுரைப்படிகற்பிழந்தவ ளென்று, வேத்தவையில் அரசன்முன்சொன்னதை அவையோர் ஒப்புக் கொண்டதும் அவ்வாறேநச்சினார்க்கினியரும் தொல் காப்பியவுரைவரைந்திருப்பதும், கோழிக்கோட்டு மன்னரானசாமொரின் குடியினர் தாம் மணந்த பெண்டிரை முதல்முந்நாள் பிராமணன் நுகரவிட்டதும், தமிழரின்அல்லது தமிழ வழியினரின் தன்மானமின்மைக்குச்சிறந்த எடுத்துக்காட்டாம்.

நெஞ்சுரமின்மை: திருவரங்கத்தில்அரங்கநாயகி மூக்குத்தியைத் திருடிய பிராமணப்பெண், அத் தெய்வம் ஏறியவளாக நடித்து,கழுநீர்ப்பானையினின்று அம் மூக்குத்தியைஎடுத்துக் கொடுத்த போது, தஞ்சை விசயராகவலுநாயக்கர் தண்டியாது விட்டதும்;

இறுதியாக ஆண்ட திருவாங்கூர் மன்னர்இங்கிலாந்து சென்று மீண்டவுடன், அவரது பதுமநாபர்கோவிலுக்குத் தீவைத்த பிராமணப் பூசாரியைத்தீக்கரணியம் வினவியபோது, அது மன்னர் மேனாடுசென்றதனாற் பொங்கிய தெய்வச்சினம் என்றுவிடையிறுத்ததைக் கேட்டு, வாளாவிருந்ததாகச்சொல்லப்படுவதும்;

சென்ற ஆண்டு 'தென்மொழி' ஆசிரியர்பாவலர் பெருஞ்சித் திரனார், திருநெல்வேலித்திரவியம் தாயுமானவர் தென்மதக் கல்லூரித்திருவள்ளுவர் விழாவிற் சொற்பொழிவாற்றியபோது தடுத்ததும்; தமிழ திரவிடரின்நெஞ்சுரமின்மையைத் தெற்றெனத் தெரிவிக்கும்.

தமிழ்ப்பற்றின்மை: சில கட்சித்தலைவரும் பாவிசைப் பாளரும், கட்டாய இந்தியைஏற்பதும் கோவில் தமிழ் வழிபாட்டைத் தடுப்பதும்தாய்மொழிப் பற்றின்மை யாலேயே.