பக்கம் எண் :

34தமிழர் வரலாறு-2

மாவலி என்னும் சேரவேந்தன் மகனானவாணன், வேம்பாய்க்கு (Bombay)வடக்கே மேல்கரையடுத்த சோணிதபுரம் என்னும்நகரிலிருந் தாண்டு வந்தான். அவன் மகள் உழைகண்ணன் பேரனான அநிருத்தனொடு களவொழுக்கம் பூண்டுவந்தாள். அதுகண்ட வாணன் அநிருத்தனைச்சிறையிட்டான். அதனால் கண்ணன் படையொடு வந்துபொருது வாணனைத் தோற்கடித்தான். உடனே வாணன்அநிருத்தனையும் தன் மகளையும் கண்ணனிடம்ஒப்புவித்து மன்னிப்புப் பெற்றான். அன்றுஅநிருத்தன் தந்தையான காமன் (பிரத்தியும்நன்)ஆடிய வாகைக் கூத்து, பேடி என்னும் புறநட வகையாகும்.அதையே,

"சுரியற் றாடி மருள்படு பூங்குழற்
பவளச் செவ்வாய்த் தவள வாணகை
யொள்ளரி நெடுங்கண் வெள்ளிவெண் டோட்டுக்
கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறைநுதற்
காந்தளஞ் செங்கை யேந்திள வனமுலை
யகன்ற வல்கு லந்நுண் மருங்கு
லிகந்த வட்டுடை யெழுதுவரிக் கோலத்து
வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி
நீணில மளந்தோன் மகன்முன் னாடிய
பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும்" 

(மணிமே. 3:116-125)

என்று பாடினார் சீத்தலைச்சாத்தனார்.பேடிக் கூத்து முன்னரே தமிழகத்தில் ஆடப்பட்டுவந்தது. முதற் கடல்கோட்குப்பின் குமரிநாட்டினின்று வடக்கிற் சென்ற ஆயர்வழியினனேகண்ணனாதலால், அவன் மகன் அந் நடத்தை முன்னோர்வாயிலாக அறிந்திருந்து ஆடினான்.

வாணன் நகர் குசராத்து என்னும்குச்சரநாட்டி லிருந்ததனால், அற்றைச் சேரநாடுஅதுவரை பரவி யிருந்தமை அறியப்படும். இதனால்,முழுகிப்போன குமரிநாடு முழுதும் பாண்டிநாடா யிருந்தகாலத்து, இந்திய நிலமுழுதும் குமரியாற்றிலிருந்துபனிமலைவரை, கிழக்கிற் சோழநாடும் மேற்கிற்சேரநாடுமாக இருந்ததென்னும் உண்மையும் புலனாகும்.குமரிநாடு முழுகிய பின்பும், இந்தியா முழுதும் மூவேந்தராட்சிக் குட்பட்டு முந்நாடாயிருந்த நிலைமையையே,நாரதன் மூவுல குலாவி (திரிலோக சஞ்சாரி) என்னும்வழக்குணர்த்தும். மூவுலகென்றது மூவேந்தர்நாடுகளையே. 'திரிபுவன தேவன்', 'திரிபுவனச்சக்கரவர்த்தி', 'மூவுலகாளி' என்று சோழர் விருதுப்பெயர்கள் கொண்டிருந்தமை காண்க.

அகத்தியர் இராமன் காலத்திலேயே தமிழகம் வந்து பொதிய மலையில் தங்கிவிட்டதனால், அவர் "துவராபதிப் போந்து